My daughter joined a cult.. நித்யானந்தா குறித்த ஆவணத் தொடர் இன்று ஓடிடியில் வெளியீடு!
டெல்லி: நித்யானந்தாவின் சர்ச்சைக்குரிய வாழ்க்கை குறித்த "My daughter joined a cult" எனும் ஆவணத் தொடர் இன்று இந்தியா முழுவதும் ஓடிடியில் வெளியாகிறது.
நித்யானந்தா - எப்போதும் மக்களுக்கு திகட்டாத ஒரு "சப்ஜெக்ட்". இவர் குறித்த செய்திகள், குறிப்புகள், பேட்டிகள், வீடியோக்களை மக்கள் பார்ப்பது வழக்கம். இவர் சர்ச்சைக்குரியவராக இருந்தாலும் இவரது செயல்பாடுகளை மக்கள் ரசிப்பர்.
இவர் பேசுவது சிரிப்பது எல்லாமே இளைஞர்களுக்கு என்டர்டெய்ன்மென்ட்டாக இருக்கும். இவரது சேட்டைகள், சர்ச்சைகள், காமெடி பேச்சுகள், மாறுவேடங்கள் உள்ளிட்டவற்றை ஒரு படமாகவே எடுக்கலாம்.

ஆவண தொடர்
ஆனால் இவரது வாழ்க்கை வரலாறு ஆவண தொடராக எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு "My daughter joined a cult" என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடர் இன்று இந்தியா முழுவதும் ஓடிடியில் டிஸ்கவரி பிளஸில் வெளியாகிறது. 3 பகுதிகளாக வெளியாகும் இந்த தொடரை வைஸ் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

இயக்குநர்
இந்த தொடரை நமன் சரையா என்பவர் இயக்கியுள்ளார். இது இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகிறது. நித்யானந்தா தியான பீடம் மற்றும் ஆசிரமத்தில் சீடர்களை கவர்ந்தது முதல் அவர்களை துன்புறுத்தியது வரை முன்னாள் பக்தர்களின் பேட்டிகளை வைத்து தொடராக்கப்பட்டது.

வீழ்ச்சிக்கு காரணம்
இதுகுறித்து இயக்குநர் நமன் கூறுகையில் இந்த தொடர் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். நித்யானந்தா வீழ்ச்சி அடைய காரணமாக இருந்த நிகழ்வுகள் உள்ளிட்டவையும் இதில் இடம் பெறும். முன்னாள் பக்தர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துகளை கேட்டு நித்யானந்தா குறித்த ஆவணத் தொடர் உருவாகியுள்ளது.

சர்ச்சை
சர்ச்சைக்குரிய வகையில் இருந்தாலும் அவருக்கு பக்தர்கள் கூட்டம் எப்படி வந்தது போன்றவை எல்லாம் இதில் இடம்பெறும். நித்யானந்தா குறித்தும் அவரது அமைப்புகள் குறித்தும் நிறைய பேரிடம் பேசி விரிவாக கொடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிப்பால் லைவில் நித்யானந்தா வராமல் இருந்தார். தற்போது இந்த ஆவணப் படத்தின் மூலம் நித்யானந்தா குறித்து முழு விவரங்களும் மக்களுக்கு சென்றடைய போகிறது. நித்யானந்தாவின் நிஜ வாழ்க்கையில் உள்ள மர்மங்களுக்கு இந்த ஆவணத் தொடர் மூலம் பதில் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications