டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு..முழு எமெர்ஜென்சி பிறப்பித்த அதிகாரிகள்..என்னாச்சு?
டெல்லி: டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட சரக்கு விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது பறவை மோதியது. பறவை மோதியதில் விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக இயங்கக் கூடிய விமான நிலையங்களில் ஒன்றாகும்.
இந்த விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.45 மணியளவில் துபாய்க்கு FedEx- என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சரக்கு விமானம் புறப்பட்டு சென்றது.

அவசர தரையிறங்க அனுமதி
விமானம் ஆயிரம் அடி உயரத்தில் நடு வானில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விமானத்தின் கண்னாடியில் பறவை மோதியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை டெல்லி விமான நிலையத்திற்கே திருப்பி தரையிறக்க விமானி முடிவு செய்தார். இதையடுத்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு விமானம் அவசர தரையிறங்க அனுமதி கேட்டார்.

விமானத்தை ஆய்வு செய்தனர்
தொடர்ந்து விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு விமானம் தரையிறங்க அனுமதி கொடுக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் தொழில் நுட்ப குழுவினர் விரைந்து சென்று விமானத்தை ஆய்வு செய்தனர். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் முடிந்த பிறகு விமானம் மீண்டும் நண்பகல் 1.40 மணிக்கு துபாய் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

பறவைகள் மோதுவதால்
விமானத்தில் பறவைகள் மோதுவது என்பது மிகவும் சாதாரண ஒன்றாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் பறவைகள் மோதுவதால் உரிய பாதுகாப்பு பரிசோதனை செய்யாவிட்டால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயமும் இருப்பதால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த ஆகாஷா ஏர் விமானம் பறவை மோதியதால் மும்பைக்கு அவசரமாக திருப்பி விடப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக
அதேபோல், அண்மையில் சூரத்தில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பறவை மோதியதால் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. பறவை மோதியதில் விமானத்தின் என்ஜின் பிளேடும் சேதம் அடைந்து இருந்தது. கடந்த சில தினங்களாக டெல்லியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பயணிகள் விமானம் பலவும் அடிக்கடி திருப்பி விடப்பட்டு இருந்தது. கடந்த வியாழக்கிழகை மோசமான வானிலையால் டெல்லி விமான நிலையத்தில் இருந்து 22 விமானங்கள் திருப்பி விடப்பட்டு இருந்தன.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications