சாப்ட்வேரில் சின்ன பிரச்சனை.. தாமதமாக புறப்பட்ட 149 விமானங்கள்.. என்ன நடந்தது ஏர் இந்தியாவில்?
கணினி தொழில்நுட்ப கோளாறு காரணமாக 149 ஏர் இந்தியா விமானங்கள் இன்று மிகவும் தாமதமாக புறப்பட்டது.
டெல்லி: கணினி தொழில்நுட்ப கோளாறு காரணமாக 149 ஏர் இந்தியா விமானங்கள் இன்று மிகவும் தாமதமாக புறப்பட்டது. இன்னும் பல விமானங்கள் இன்று தாமதமாக புறப்படும் என்று கூறப்படுகிறது.
ஏர் - இந்தியா விமானம் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமாகும். இந்தியாவின் முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமாக இது உள்ளது.
இந்த நிறுவனம் தற்போது பிஎஸ்எஸ் என்ற சாப்ட்வேர் மூலம் தங்களது பயணிகளுக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்து வருகிறது.

என்ன சாப்ட்வேர்
இந்த பிஎஸ்எஸ் சாப்ட்வேர் என்பது பேஸஞ்சர் சர்விஸ் சிஸ்டம் என்பதாகும். இதன் மூலம்தான் ஒரு பயணியின் செக் - இன் குறித்து சோதிப்பது, ரிஸர்வேஷனை பதிவு செய்து கொள்வது, இருக்கைகளை தேர்வு செய்வது என்று எல்லாம் பணிகளும் நடக்கும். பயணிகள் எப்படி பயணிப்பார்கள் என்பதை இதை வைத்தே தீர்மானிக்கிறார்கள்.

என்ன பிரச்சனை
இந்த நிலையில் இதில்தான் நேற்று மாலை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது செயல்படாமல் இருந்துள்ளது. இதனால் நேற்று மாலையில் இருந்தே ஏர் இந்தியா விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 149 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

எப்படி தாமதம்
தற்போது பணியாளர்கள் இந்த சாப்ட்வேர் செய்யும் பணிகளை கணினியின் உதவி இல்லாமல் சுயமாக செய்கிறார்கள். இதனால் இந்த காலதாமதம் ஏற்படுகிறது. எல்லா விமானமும் சுமார் 3-4 மணி நேரம் தாமதமாக செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் கஷ்டம்
இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இன்றும் விமானம் தாமதமாக செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஏற்பட்டு இருக்கும் தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முடியாத காரணத்தால் பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications