9.220 TMC பற்றாக்குறை! கர்நாடகா அரசுக்கு பிரஷர்! மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த துரை முருகன்
டெல்லி: கர்நாடகா அரசு காவிரியில் நீர் திறக்காத நிலையில் இன்று தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரை முருகன் டெல்லியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விவாதிக்கப்பட்டது என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே காவிரி நீர் பங்கீட்டு செய்வது தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடாமல் உள்ளது.

இதற்கிடையே தான் காவிரிக்கு குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டவும் கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் இருமாநில தலைவர்கள் இடையே கருத்து மோதல்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில் தான் டெல்லியில் இன்று தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரை முருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். இந்த வேளையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்காமல் உள்ளது. இதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரை முருகன் கோரிக்கை வைத்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு அமைச்சர் துரைமுருகன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதம் 3ம் தேதி நிலவரப்படி 12.213 டிஎம்சி நீர் வந்திருக்க வேண்டும். ஆனால் 2.993 டிஎம்சி தண்ணீர் மட்டும் கிடைத்துள்ளது. 9.220 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இது தொடர்ந்தால் டெல்டாவில் பயிர்கள் வாடிவிடும்.
இதனால் பற்றாக்குறையாக உள்ள தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கான நீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க தெரிவித்தேன்.
இதையடுத்து இணை செயலாளரை அழைத்து ஆலோசனை நடத்தி ஆணையத்துடன் பேசுவதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பு அல்ல. மத்திய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட்டு வருகிறது. இதனால் மத்திய அமைச்சரை சந்தித்தோம். ஏற்கனவே இதுதொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கும் கடிதம் எழுதி உள்ளோம்'' என்றார்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
"ஐ லவ் யூ.." அத்துமீறிய பேராசிரியருக்கு செருப்படி.. கர்நாடகாவில் தக்க பாடம் புகட்டிய கல்லூரி மாணவி -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே?












Click it and Unblock the Notifications