ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல்.. ஆன்லைன் கல்வி.. கல்வித்துறை குறித்து நிர்மலா சீதாராமன்!
டெல்லி: 1-ம் வகுப்பு முதல் 12- வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் தனி கல்விச் சேனல் தொடங்கப்படும் என்றும் ஆன்லைன் மூலம் கல்வி கற்பதை ஊக்குவிக்க இ-வித்யா என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Recommended Video
5 வது மற்றும் இறுதி கட்ட பொருளாதார திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். அவர் தனது அறிவிப்பின் போது, பள்ளிக்கல்விக்காக ஏற்கனவே 3 தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு அனுமதி உள்ளது. தற்போது புதிதாக மேலும் 12 தொலைக்காட்சி சேனல்கள் கல்விக்காக உருவாக்க திட்டமிட்டுள்ளளோம். இதன்படி 1-ம் வகுப்பு முதல் 12- வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் தனி கல்விச் சேனல் தொடங்கப்படும்.
200 புதிய பாடப்புத்தகங்கள் இ-பாடசாலையில் சேர்க்கப்பட்டுள்ளன, மாநிலங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான நேரடியாக உரையாடும் அமர்வுகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, கல்வி நேரத்தை பகிர்ந்து கொள்ள மாநிலங்கள் ஒருங்கிணைக்கின்றன. கல்வி தொலைக்காட்சி நாளொன்றுக்கு 4 மணி நேரம் ஒளிபரப்பப்படும்
ஆசிரியர்கள் மாணவர்கள் இடையேயான உரையாடல் கல்வித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்.
6.81 கோடி இலவச எரிவாயு சிலிண்டர்கள் பெற்றுள்ளனர்.. நிர்மலா சீதாராமன் தகவல்
ஆன்லைன் மூலம் கல்வி கற்பதை ஊக்குவிக்க பிரதம மந்திரி இ-வித்யா என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். இவை தொழில்நுட்பம் சார்ந்த கல்வி மையமாக இருக்க வேண்டும்- டிஜிட்டல் / ஆன்லைன் கல்விக்கான அணுகலுக்காக திட்டம் தொடங்கப்பட உள்ளது.. இந்தியாவின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 2020 மே 30 க்குள் தானாகவே ஆன்லைன் படிப்புகளைத் தொடங்க அனுமதிக்கப்படும்" என்றார்.