மாலத்தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு!
டெல்லி: மாலத்தீவில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியது. நிலநடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மாலத்தீவு. பல்வேறு தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய மாலத்தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியது. மாலத்தீவு நேரப்படி மாலை 5.14 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

நேற்று இரவு அரபிக்கடலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மும்பையை ஒட்டியுள்ள அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானது. நேற்று இரவு 9.52 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக ஆப்கான் - தஜிகிஸ்தான் எல்லையில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இதேபோல் ஆப்கானிஸ்தானில் 4 ஆம் தேதி அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு இருந்தது. ரிக்டர் அளவுகோலில் 4.4 மற்றும் 4.8 என்ற அளவில் பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன. இதேபோல் புத்தாண்டு தினத்தில் பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்த நிலநடுக்கத்தால் ஜப்பான் நிலைகுலைந்தது.
ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தொடர்ந்து சுனாமி அலைகளும் தாக்கின. ஜனவரி 1 ஆம் தேதியே ஏற்பட்ட இயற்கை பேரிடரால் ஜப்பானில் இதுவரை 62 பேர் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications