டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு.. மக்கள் அச்சம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இரவு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தலைநகர் டெல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். அண்மைக்காலமாகவே தலைநகர் டெல்லியில் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் இன்று இரவு டெல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வால் கட்டிடங்கள் அதிர்ந்தன. உயரமான கட்டிடங்களில் இருந்தவர்கள் நில அதிர்வை நன்கு உணர முடிந்ததாக கூறினர். இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

 Earthquake tremors felt in Delhi 23-01-2024

டெல்லியில் கடந்த 11 ஆம் தேதி லேசான நில அதிர்வு உணரப்பட்டு இருந்தது. அன்றைய தினம் ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவில் 6.1 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டு இருந்தது. இந்த நில அதிர்வால் வீடுகளில் உள்ள பொருட்களும் அதிர்ந்தன. உயரமான கட்டிடங்களில் வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதியில் தஞ்சம் அடைந்து இருந்ததையும் காண முடிந்தது. இந்த நில அதிர்வு ஏற்பட்டு அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் தலைநகரில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+