சசிகலா கட்சியுடன் கூட்டணியா.. அமித்ஷாவுடன் ஆலோசித்தது என்ன? டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
டெல்லி: சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து அமித்ஷாவுடன் எதுவும் பேசவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் சில கட்சிகளுடன் பேசி வருவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டுமென அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அடுத்தக் கட்டத்தை எட்டி இருக்கிறது. மதுரையில் என்டிஏ கூட்டணி தலைவர்கள் முதற்கட்ட ஆலோசனையில் ஈடுபட்ட சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி வந்தார். வழக்கமாக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், கேபி முனுசாமி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் டெல்லி வருவார்கள்.

ஆனால் இம்முறை அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி தனியாக வந்திருந்தார். இதனால் அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீட்டில் இறுதி உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன்பின் நேற்றிரவு டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.
இதன்பின் இன்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து தமிழ்நாடு அரசியல் நிலவரங்கள் தொடர்பாக பேசினோம். தேர்தலில் எப்படி செயல்பட வேண்டுமெனவும் ஆலோசனை நடத்தினோம்.. அதேபோல் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மேலும் சில கட்சிகள் இணையக் கூடும்.
சிகலா தொடங்கியுள்ள புதிய கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து அமித்ஷாவுடன் எதுவும் பேசவில்லை. பிரதமர் மோடி மதுரை வந்த போது பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதனால் இம்முறை தனியாக டெல்லி வந்துள்ளேன். எங்களை பொறுத்தவரை மிக சுமூகமாக எழுச்சியான கூட்டணி அமைந்துள்ளது. தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.. திமுக கூட்டணியில் தான் குழப்பம் உள்ளது. ஏனென்றால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்குமா, இல்லையா என்று விவாதித்து வருகின்றனர். விரைவில் தொகுதி பங்கீடு தொடங்கப்படும். இந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக வென்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
-
தீயாய் வேலை செய்யும் திமுக..ஆமை வேகத்தில் அதிமுக! இப்படியே போனால் அவ்வளவு தான்? எடப்பாடிக்கு பிரஷர்! -
மயிலம், மேட்டூர் தொகுதியை கேட்கும் அதிமுக.. சேலம், தர்மபுரியில் செக் வைத்த அன்புமணி.. என்ன நடந்தது? -
காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள்.. அதிமுகவை கூடுதலாக நெருக்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி கணக்கு என்ன? -
"அண்ணன் எடப்பாடியாரே.. எச்சரிக்கையா இருங்க”.. நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலை.. திருமாவளவன் வார்னிங்! -
அதிமுகவிடம் 57 தொகுதிகளை கேட்கும் பாஜக? 57 பொறுப்பாளர்கள் வராங்களாம்.. பிஎல் சந்தோஷ் சொன்ன தகவல்! -
வெல்லமண்டி நடராஜனுக்கு புதிய பொறுப்பு.. தேர்தல் நேரத்தில் எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு! -
மீண்டும் கொங்கு பகுதியில் இருந்து ராஜ்ய சபா எம்பி.. தரமான சான்ஸை தவறவிட்ட எடப்பாடி! -
அதிமுகவுக்கு முன் தொகுதி பங்கீட்டை முடித்த திமுக.. அடித்து ஆடும் ஸ்டாலின்.. அமைதி காக்கும் எடப்பாடி! -
ராஜ்யசபா வேட்பாளர்கள்: தேமுதிக சுதீஷ், பாமக அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் வேட்பு மனு தாக்கல் -
Rajya sabha: அன்புமணி வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என ராமதாஸ் தரப்பு எதிர்ப்பு.. பரிசீலனையின்போது பரபர! -
அதிமுக vs திமுக.. தொழில் துறையில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி என்ன? டேட்டாவுடன் வந்த டிஆர்பி ராஜா! -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான்












Click it and Unblock the Notifications