சசிகலா கட்சியுடன் கூட்டணியா.. அமித்ஷாவுடன் ஆலோசித்தது என்ன? டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
டெல்லி: சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து அமித்ஷாவுடன் எதுவும் பேசவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் சில கட்சிகளுடன் பேசி வருவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டுமென அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அடுத்தக் கட்டத்தை எட்டி இருக்கிறது. மதுரையில் என்டிஏ கூட்டணி தலைவர்கள் முதற்கட்ட ஆலோசனையில் ஈடுபட்ட சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி வந்தார். வழக்கமாக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், கேபி முனுசாமி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் டெல்லி வருவார்கள்.

ஆனால் இம்முறை அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி தனியாக வந்திருந்தார். இதனால் அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீட்டில் இறுதி உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன்பின் நேற்றிரவு டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.
இதன்பின் இன்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து தமிழ்நாடு அரசியல் நிலவரங்கள் தொடர்பாக பேசினோம். தேர்தலில் எப்படி செயல்பட வேண்டுமெனவும் ஆலோசனை நடத்தினோம்.. அதேபோல் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மேலும் சில கட்சிகள் இணையக் கூடும்.
சிகலா தொடங்கியுள்ள புதிய கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து அமித்ஷாவுடன் எதுவும் பேசவில்லை. பிரதமர் மோடி மதுரை வந்த போது பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதனால் இம்முறை தனியாக டெல்லி வந்துள்ளேன். எங்களை பொறுத்தவரை மிக சுமூகமாக எழுச்சியான கூட்டணி அமைந்துள்ளது. தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.. திமுக கூட்டணியில் தான் குழப்பம் உள்ளது. ஏனென்றால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்குமா, இல்லையா என்று விவாதித்து வருகின்றனர். விரைவில் தொகுதி பங்கீடு தொடங்கப்படும். இந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக வென்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
-
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி! -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
நடிகர் கார்த்திக் இதுக்குதான் வர்றாரா? போயஸ் கார்டனில் இருந்து அந்த "உத்தரவு".. அலறிய முக்கிய கட்சி -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா? -
அதிமுகவுக்கு ஆதரவு.. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்கு நீலம் பண்பாட்டு மையம் சப்போர்ட்! பா.ரஞ்சித் அறிவிப்பு -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
மாஜி அமைச்சர் டூ முன்னாள் எம்பி வரை.. 23 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்தார் சசிகலா.. லிஸ்ட்












Click it and Unblock the Notifications