மின்வெட்டை உருவாக்கியுள்ளனர்! எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள் தான் காரணம் - மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்!
டெல்லி : எதிர்க்கட்சிகள் ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு அவர்களால் உருவாக்கப்பட்டவையாகும் எனவும், மின்சார தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவில் நிலக்கரி கையிருப்பில் உள்ளது என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏசி, ஃபேன், ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின் தேவையும் கூடியுள்ளது.
இதன் காரணமாக பல மாநிலங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்துள்ளனர். மேலும் நிலக்கரி தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படுகிறது.

திடீர் மின் தடை
ஹரியானா, டெல்லி, ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் பல இடங்களில் 10 மணிநேர மின்வெட்டு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பல பிரபலங்களே அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் மின் தடையால் பல மாநிலங்கள் இருளில் மூழ்கி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மாற்று மின்சார வசதி இல்லாத மருத்துவமனைகளிலும் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்
திடீர் கோளாறு காரணமாக டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், இமாச்சலபிரதேசம், ராஜஸ்தான், காஷ்மீர் ஆகிய 7 வட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் கடந்த சில நாட்களுக்கு முன் கடும் மின் வெட்டு ஏற்பட்டது. ஆனால் அது அடுத்த நாளே சரிசெய்யப்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு அவர்களால் உருவாக்கப்பட்டவையாகும் எனவும், மின்சார தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவில் நிலக்கரி கையிருப்பில் உள்ளது என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.

சிக்கலில் கோல் இந்தியா
நாட்டின் தேவை வியாழன் பிற்பகலில் 204 ஜிகாவாட்களை எட்டி புதிய உச்சத்தை தொட்ட நிலையில், நிலக்கரி தரவில்லை என மத்திய அரசை குறை கூறும் பல மாநிலங்கள் இதுவரை வழங்கிய நிலக்கரிக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை எனவும், இதனால் கோல் இந்தியா சிக்க வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்த ஆர்.கே.சிங், இந்த மாநிலங்கள் மின்சாரம் வாங்குவதற்குப் பதிலாக மத்திய அரசு மீது சுமைகளை புகுத்த விரும்புகின்றன, மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒரு யூனிட்டுக்கு ரூ.12 என்ற கட்டணத்தில் கிடைக்கும் மின்சாரத்தை விலைக்கு வாங்கி சுமையை குறைக்கக் கூட முயற்சிக்கவில்லை என்றார்.

நிலக்கரி இருப்பு
மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு குறித்து பேசிய அவர், லாஜிஸ்டிக் பிரச்சனைகள் காரணமாக சில மின் உற்பத்தி நிலையங்களில் சிக்கல்கள் உள்ளன, ஆனால் போதுமான நிலக்கரி இருப்பு உள்ளது என்றும், 21 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு மின் உற்பத்தி நிலையங்களில் உள்ளது, இது 10 நாட்களுக்கு போதுமானது எனவும் ஆர்.கே.சிங் கூறினார். 2019-20ல் நிலக்கரி வழங்கல் 569 மில்லியன் டன்னிலிருந்து 2021-22ல் 662 மில்லியன் டன்னாக உயர்ந்ததைச் சுட்டிக்காட்டிய சிங், திடீர் தேவை அதிகரிப்பால் லேசான சிக்கல் வந்ததாக குறிப்பிட்டார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications