நேற்று மகாராஷ்டிரா, டெல்லி.. இன்று மேற்கு வங்கம்! பாஜக ஆளாத மாநிலங்களில் அமலாக்கத்துறை, சிபிஐ அதிரடி
டெல்லி: மகாராஷ்டிராவில் 2 அமைச்சர்களை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கடந்த பிப்ரவை மாதம் கைது செய்த நிலையில் இன்று மேற்கு வங்க அமைச்சரை கைது செய்துள்ளது.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்ததில் ஊழல் செய்ததாக கூறி தொடர்ப்பட்ட வழக்கில் மேற்கு வங்க தொழிற்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்து இருக்கிறது.
2016 ஆம் ஆண்டு நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில், ரூ.100 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்திருப்பதாக தகவல் வெளியானதால் அமலாக்கத்துறையும் இந்த விசாரணையில் இறங்கியது.

கட்டுக்கட்டாக பணம்
அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், அவரது உதவியாளர் அர்பிதா முகெர்ஜியின் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 20 மொபைல் போன்கள், முக்கிய ஆவணங்கள், பதிவுகள், எலெக்டிரானிக் கருவுகள், வெளிநாட்டு நாணயங்கள், தங்கம் உள்ளிட்ட பல பொருட்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளார்கள்

மகாராஷ்டிரா அமைச்சர்
உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தபோது மகாராஷ்டிராவில் அமைச்சராக இருந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவாப் மாலிக். ஷாரூக் கான் மகன் போதை மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்டபோது மத்தியில் ஆளும் பாஜக அரசையும், போதைப்பொருள் தடுப்புப்பிரிவினரையும் கண்டித்து பேசியவர். இந்த சூழலில் தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளிடம் குறைந்த விலையில் நிலம் வாங்கியதாகவும், பல கோடி மோசடி செய்ததாகவும் குற்றம்சாட்டி இவரை பிப்ரவரி மாதம் கைது செய்தது அமலாக்கத்துறை. இதேபோல் மற்றொரு மகாராஷ்டிரா அமைச்சர் அனில் தேஷ்முக் மோசடி வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

டெல்லி அமைச்சர்கள்
ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியில் சுகாதாரத்துறை சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை மோசடி வழக்கில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். வகுக்கப்பட்டு உள்ள மதுபான கொள்கையில் தனியார் உற்பத்தியாளர்கள் லாபமடைந்து இருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து உள்ளார். இதனை கண்டித்து உள்ள முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், "சாவர்க்கர்களின் சீடர்கள் அல்ல நாங்கள், பகத் சிங்கின் பிள்ளைகள்" என்று விமர்சித்து இருந்தார்.

சோனியா, ராகுல்
இதேபோல் நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரிடம் அண்மையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருக்கிறது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளை சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் வைத்து குறிவைப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
-
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications