Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேற்று மகாராஷ்டிரா, டெல்லி.. இன்று மேற்கு வங்கம்! பாஜக ஆளாத மாநிலங்களில் அமலாக்கத்துறை, சிபிஐ அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மகாராஷ்டிராவில் 2 அமைச்சர்களை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கடந்த பிப்ரவை மாதம் கைது செய்த நிலையில் இன்று மேற்கு வங்க அமைச்சரை கைது செய்துள்ளது.

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்ததில் ஊழல் செய்ததாக கூறி தொடர்ப்பட்ட வழக்கில் மேற்கு வங்க தொழிற்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்து இருக்கிறது.

2016 ஆம் ஆண்டு நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில், ரூ.100 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்திருப்பதாக தகவல் வெளியானதால் அமலாக்கத்துறையும் இந்த விசாரணையில் இறங்கியது.

கட்டுக்கட்டாக பணம்

கட்டுக்கட்டாக பணம்

அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், அவரது உதவியாளர் அர்பிதா முகெர்ஜியின் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 20 மொபைல் போன்கள், முக்கிய ஆவணங்கள், பதிவுகள், எலெக்டிரானிக் கருவுகள், வெளிநாட்டு நாணயங்கள், தங்கம் உள்ளிட்ட பல பொருட்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளார்கள்

மகாராஷ்டிரா அமைச்சர்

மகாராஷ்டிரா அமைச்சர்

உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தபோது மகாராஷ்டிராவில் அமைச்சராக இருந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவாப் மாலிக். ஷாரூக் கான் மகன் போதை மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்டபோது மத்தியில் ஆளும் பாஜக அரசையும், போதைப்பொருள் தடுப்புப்பிரிவினரையும் கண்டித்து பேசியவர். இந்த சூழலில் தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளிடம் குறைந்த விலையில் நிலம் வாங்கியதாகவும், பல கோடி மோசடி செய்ததாகவும் குற்றம்சாட்டி இவரை பிப்ரவரி மாதம் கைது செய்தது அமலாக்கத்துறை. இதேபோல் மற்றொரு மகாராஷ்டிரா அமைச்சர் அனில் தேஷ்முக் மோசடி வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

டெல்லி அமைச்சர்கள்

டெல்லி அமைச்சர்கள்

ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியில் சுகாதாரத்துறை சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை மோசடி வழக்கில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். வகுக்கப்பட்டு உள்ள மதுபான கொள்கையில் தனியார் உற்பத்தியாளர்கள் லாபமடைந்து இருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து உள்ளார். இதனை கண்டித்து உள்ள முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், "சாவர்க்கர்களின் சீடர்கள் அல்ல நாங்கள், பகத் சிங்கின் பிள்ளைகள்" என்று விமர்சித்து இருந்தார்.

சோனியா, ராகுல்

சோனியா, ராகுல்

இதேபோல் நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரிடம் அண்மையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருக்கிறது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளை சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் வைத்து குறிவைப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+