விஜய் மல்லையா பிரான்சில் வாங்கி வைத்திருந்த 1.6 மில்லியன் யூரோ சொத்துக்கள்.. அமலாக்கத்துறை முடக்கம்
டெல்லி: பிரான்சில் உள்ள விஜய் மல்லையாவின் 1.6 மில்லியன் யூரோ (14 கோடி) மதிப்புள்ள சொத்தை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
சுமார் 9000 கோடி ரூபாய் பணத்தை இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடியவர் தொழிலதிபர் விஜய் மல்லையா.
கிங்பிஷர் விமான நிறுவனத்தை நடத்தி வந்த இவர் ஒரு கட்டத்தில் தொழிலில் கடும் சரிவை சந்தித்த நிலையில் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாமால் தப்பி ஓடிவிட்டார்.
தற்போது விஜய் மல்லையா மீது லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. தொழிலதிபர் விஜய் மல்லையா மீது மத்திய அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது.

சொத்துக்கள் பறிமுதல்
தற்போது விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. விஜய் மல்லையாவின் 1.6 மில்லியன் யூரோ மதிப்புள்ள (இந்திய மதிப்பில் 14.34 கோடி) சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு வாங்கிய கடனுக்காக முடக்கி செய்துள்ளது.

பிரான்ஸ் சொத்து
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிவிப்பில். "பிரான்சின் 32 அவென்யூ ஃபோச்சில் அமைந்துள்ள விஜய் மல்லையாவின் சொத்து அமலாக்க இயக்குநரகத்தின் கோரிக்கையின் பேரில் பிரெஞ்சு ஆணையம் முட்க்கம் செய்துள்ளது. பிரான்சில் முடக்கம் செய்யப்பட்ட சொத்தின் மதிப்பு 1.6 மில்லியன் யூரோக்கள் (ரூ .14 கோடி) ஆகும். கிங்பிஷர் ஏர்லைன்ஸ் லிமிடெட் வங்கியின் கணக்கிலிருந்து வெளிநாட்டிற்க பெரிய தொகை அனுப்பப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது, " என்று கூறியுள்ளது.

நாடு கடத்த உத்தரவு
முன்னதாக இந்தியாவின் வேண்டுகோளின் பேரில், கடந்த 2017-ம் ஆண்டு விஜய் மல்லையா கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் உடனடியாக ஜாமீனில் வெளிவந்தார். அவரை நாடு கடத்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு எதிரான விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்தது. இருப்பினும், அவர் இன்னும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவில்லை.

எவ்வளவு காலம்
இதுகுறித்து கேட்டபோது, இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் (பொறுப்பு) ஜன் தாம்சன் அண்மையில் அளித்த பேட்டியில். சில சட்டப்பிரச்சினைகள் இருப்பதால், அவற்றுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. இதற்கு தீர்வு கிடைக்கும் வரை, விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது. அது, ரகசியமான விவகாரம். அதைப்பற்றி நான் விரிவாக கூற முடியாது. இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்றும் நான் கணிக்க முடியாது. இருப்பினும், கூடிய விரைவில் தீர்வு காண முயன்று வருகிறோம் என்றார்.

கடனை கட்ட தயார்
இதனிடையே தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுக்கும் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய அசல் தொகையில் 100 சதவீதத்தை திரும்பப் தர விரும்புவதாக அடிக்கடி கூறி வருகிறார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications