லாக்டவுனை விதித்து 130 கோடி இந்தியர்களை காப்பாற்றிய பிரதமர் மோடியை உலகமே பாராட்டுகிறது.. ஜேபி நட்டா
டெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு தழுவிய லாக்டவுனை விதித்து 130 கோடி இந்தியர்களின் உயிரைக் காப்பாற்றிய நரேந்திர மோடி அரசாங்கத்தை உலகமே பாராட்டியுள்ளது என்று பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து காணொலி காட்சி முறையில் ஜார்கண்ட் பாஜக செயற்குழு கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா பேசுகையில், "அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் நெருக்கடியை சமாளிப்பதற்கான வழிகள் குறித்து உறுதியாக தெரியாத நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய லாக்டவுனை விதித்தார்.

கொரோனாவிற்கு எதிரான போரில உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் விளைவாக 11 லட்சம் பேருக்கு தினமும் சோதனைகள் இப்போது நடத்தப்படுகின்றன. முன்னதாக மார்ச் மாதத்தில் வெறும் 15 பரிசோதனைகள் தினமும் என்ற அளவில் மட்டுமே இந்தியா இருந்தது.
கொரோனா பரவ தொடங்கிய ஆரம்ப நாட்களில் இந்தியாவில் வென்டிலேட்டர்கள் கட்டமைப்பு போதிய அளவு இல்லை ஆனால் இப்போது நாட்டில் மூன்று லட்சம் வென்டிலேட்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 4.5 லட்சம் பிபிஇ கிட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, மேலும் இந்தியா சுமார் 30 நாடுகளுக்கு ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்துள்ளது.
தொற்றுநோய்களுக்கு மத்தியில் ஏழைகளுக்கான நலத்திட்டங்களுக்கும் மததிய அரசு லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கிறது. "கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் நவம்பர் வரை 80 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. , 8.5 கோடி விவசாயிகளுக்கு இரண்டு கட்டங்களாக ரொக்க சலுகைகள் கிடைத்துள்ளன.
1,500 தொகை ஜன தன் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உஜ்வாலா யோஜனாவின் கீழ் ஏழைகளுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. ஆத்மா நிர்பர் பாரத் அபியனின் கீழ் பொருளாதாரத்தை மீட்க பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஐநா சபையின் பொதுச்செயலாளர் கூட பாராட்டியுள்ளார்" இவ்வாறு கூறினார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications