இதை மட்டும் செய்யலன்னா கஷ்டம் தான்.. EV வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு.. எதிர்கொள்ள இருக்கும் சவால்கள்
டெல்லி: பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. அதுபோல புதைபடிவ எரிபொருட்களும் வரும் காலத்தில் பற்றாக்குறை ஏற்படும் சூழலும் உள்ளது. எனவே இதற்கு மாற்றாக மின்சாராத்தில் இயங்கக் கூடிய வாகனங்கள் மீது தற்போது கவனம் அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் தற்போது மின்சாரத்தில் இயங்கக் கூடிய வாகனங்கள் எண்ணிக்கை பெருக தொடங்கிவிட்டது. இந்தியாவிலும் படிப்படியாக தற்போது மின்சாரத்தில் இயங்கக் கூடிய கார்கள் மற்றும் பைக்குகள் மீது மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் எலக்ட்ரிக் கார்களை தற்போது எல்லாம் சர்வ சாதாரணமாக காண முடிகிறது. மக்களும் எலக்ட்ரிக் கார்கள் மீது தங்கள் கவனத்தை திருப்பியுள்ளதையே இது காட்டுகிறது.

ஆனால், அதேவேளையில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கை பெருகியிருப்பதால் புதிய சவாலும் ஏற்பட தொடங்கியுள்ளது. ஏனெனில், வாகனங்களுக்கான மின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால், வரும் காலத்தில் மின்சார உற்பத்தியை அதிகரிக்காவிட்டால் கடும் சவாலாக அமையும் என்று அத்துறையை சேர்ந்த பலரும் முன்வைக்கும் வாதமாக உள்ளது. இதனால், மத்திய மாநில அரசுகள் இதில் கவனம் செலுத்தி மின் உற்பத்தியை அதிகரிப்பதே பெருகி வரும் தேவையை சமாளிக்க சரியான தீர்வாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 11 மாதங்களில் மட்டும் மின்சார வாகனங்களின் மின் நுகர்வு 3 மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. கடந்த மாதத்தில் மட்டும் 144.4 லட்சம் யூனிட்களை மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் மையங்களுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தின் மின் விநியோக நிறுவனம் (MSEDCL) என்று கூறியுள்ளது. தற்போது மாநிலம் முழுவதுமே மின்சார வாகன உற்பத்தி அதிகரித்துள்ளதால் சார்ஜிங் நிலையங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், மின் தேவையும் கணிசமாக உயரும் என்று சார்ஜிங் நிலையங்கள் வைத்துள்ளவர்களும் கூறுகிறார்கள். இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தின் மின் விநியோக நிறுவன அதிகாரி இது பற்றி கூறுகையில், மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டதால், சார்ஜிங் நிலையங்கள் வழியாக வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றுவதும் அதிகரித்து உள்ளது" என்றார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு 4,640 மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனையான நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 1.22 லட்சமாக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 3 லட்சத்திற்கு மேற்பட்ட மின்சார வாகனங்கள் ஓடுகின்றன. தற்போது பேட்டரிகளின் விலை குறைந்து இருப்பதாலும் மக்கள் மத்தியில் மின்சார வாகனங்கள் வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் மின்சார வாகனங்கள் எண்ணிக்கை உயரும் என்று அத்துறை சொல்லும் தகவலாக உள்ளது.
இந்தியாவிலும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி இந்தியாவில் குறைவாக உள்ளது. அதனால் மின்சார வாகனங்களின் விற்பனையும் குறைகிறது என புகார்கள் வந்தது. இதனால் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் மின்சார வாகனம் சார்ஜிங் உள்கட்டமைப்பை அமைப்பதற்கான வரைவுக் கொள்கையை நிதி ஆயோக் தயாரித்து ரயில்வேயிடம் வழங்கியுள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications