புழக்கம் குறைந்தது. 2019-2020-ல் ரூ2,000 நோட்டு ஒன்று கூட அச்சடிக்கவில்லை: ரிசர்வ் வங்கி
டெல்லி: 2019-2020ம் ஆண்டில் ரூ2,000 நோட்டு ஒன்றுகூட அச்சடிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் ரூபாய் நோட்டு அச்சடிப்புகள் தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:

2019- 2020-ம் ஆண்டில் ரூ2,000 நோட்டுகள் ஒன்று கூட அச்சடிக்கவில்லை. 2016-17-ல் 50% புழக்கத்தில் இருந்த ரூ2,000 நோட்டுகள் 2019-20ல் 22% ஆக குறைந்துள்ளது.
2018-ம் ஆண்டில் 336 கோடி ரூ2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2019-ல் இது 329 கோடியாகவும் 2020-ல் இது 273 கோடியாகவும் குறைந்துள்ளது.
ஆனால் ரூ500, ரூ100 நோட்டுகளின் புழக்கம் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்திருக்கின்றன. கடந்த நிதி ஆண்டில் 1,200 கோடி ரூ500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.
ரூ200 நோட்டுகள் 205 கோடியும் ரூ100 நோட்டுகள் 330 கோடியும் புழக்கத்தில் விடப்பட்டன. கடந்த நிதி ஆண்டில் 2.96 லட்சம் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
புதிய முறையிலான ரூ100 நோட்டுகளை புழக்கத்தில் விட திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா லாக்டவுன் காலம் என்பதால் இதனை அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications