வந்தே பாரத் ரயிலை ஸ்டேஷன் மாஸ்டர் கூட தொடங்கி வைக்கலாம்! பிரகாஷ் ராஜ் சரியாக கேட்டார்.. கேஎஸ் அழகிரி
டெல்லி: வந்தே பாரத் ரயிலை ஸ்டேஷன் மாஸ்டர் கூட கொடி அசைத்து துவங்கி விடலாம். ஆனால், உங்களை தவிர வேறு யார் போனாலும் மணிப்பூரில் கலவரம் அடங்காது என்று பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் சரியான கேள்வியை முன்வைத்ததாக கே.எஸ் அழகிரி கூறினார்.
டெல்லியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மோடி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார். மற்ற கட்சிகள் எல்லாம் நாட்டின் வளர்ச்சியை பற்றி நாட்டை வளர்ப்பது பற்றி தேர்தல் பிரசாரத்தில் சொன்னால் மோடி பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவேன் என தனது பிரசாரத்தில் பேச ஆரம்பித்து இருக்கிறார்.

நாட்டில் ஒரே மதம் இல்லை, ஒரே இனம் இல்லை, ஒரே கலாசாரம் இல்லை, ஒரெ இறை வழிபாடு இல்லை, நிறைய மதங்கள் இருக்கின்றன. நிறைய மொழிகள் இருக்கின்றன. இந்தி வேறு, தமிழ் வேறு, குஜராத்தி வேறு, மலையாளம் வேறு. எல்லாவற்றிலும் கலாசாரம் இருக்கிறது. இறை வழிபாடு இருக்கிறது. பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவுக்கு பொருந்தாது. எங்கேயுமே அது பொருந்தாது.
பல தரப்பு மக்கள் வாழ்கிற நாடுகளில் அது பொருந்தாது. ஆனால், பிரதமர் நாட்டின் பிரதான பிரச்சினைகளை விட்டுவிட்டு இந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்தியிருக்கிறார். காங்கிரசும் மதசார்பற்ற சக்திகளும் அதை சரியான திசையில் எதிர்க்கும் பதில் கூறுவார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். மணிப்பூருக்கு ராகுல் காந்தி செல்வதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கூறுகிறார்கள்.

ராகுல் காந்தியை போன்ற புரட்சியாளர், சீர்திருத்தாவாதி இதுக்கெல்லாம் அஞ்சுவது இல்லை. பிரதமர் மோடி போகவில்லை. குறைந்த பட்சம் நானாவது போக வேண்டும் என்று என நினைக்கிறார். பிரதமர் மோடியால் அமெரிக்கா போக முடிகிறது. ஆனால் மணிப்பூர் சென்று அமைதியை நிலை நாட்ட முடியவில்லை. நடிகர் பிரகாஷ் ராஜ் மிகவும் பொருத்தமாக சொன்னார்.
வந்தே பாரத் ரயிலை ஸ்டேஷன் மாஸ்டர் கூட கொடி அசைத்து துவங்கி விடலாம். ஆனால், உங்களை தவிர வேறு யார் போனாலும் மணிப்பூரில் கலவரம் அடங்காது. கலவரத்தை அடக்குவதற்கான வழியையும் கண்டுபிடிக்க முடியாது. செய்ய வேண்டியதை செய்யாமல் தேவையற்றதை செய்கிறீர்களே இது நியாயமா என்று கேட்டார்? இதற்கு பிரதமர் மோடி பதில் சொல்லட்டும்" என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications