வந்தே பாரத் ரயிலை ஸ்டேஷன் மாஸ்டர் கூட தொடங்கி வைக்கலாம்! பிரகாஷ் ராஜ் சரியாக கேட்டார்.. கேஎஸ் அழகிரி
டெல்லி: வந்தே பாரத் ரயிலை ஸ்டேஷன் மாஸ்டர் கூட கொடி அசைத்து துவங்கி விடலாம். ஆனால், உங்களை தவிர வேறு யார் போனாலும் மணிப்பூரில் கலவரம் அடங்காது என்று பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் சரியான கேள்வியை முன்வைத்ததாக கே.எஸ் அழகிரி கூறினார்.
டெல்லியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மோடி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார். மற்ற கட்சிகள் எல்லாம் நாட்டின் வளர்ச்சியை பற்றி நாட்டை வளர்ப்பது பற்றி தேர்தல் பிரசாரத்தில் சொன்னால் மோடி பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவேன் என தனது பிரசாரத்தில் பேச ஆரம்பித்து இருக்கிறார்.

நாட்டில் ஒரே மதம் இல்லை, ஒரே இனம் இல்லை, ஒரே கலாசாரம் இல்லை, ஒரெ இறை வழிபாடு இல்லை, நிறைய மதங்கள் இருக்கின்றன. நிறைய மொழிகள் இருக்கின்றன. இந்தி வேறு, தமிழ் வேறு, குஜராத்தி வேறு, மலையாளம் வேறு. எல்லாவற்றிலும் கலாசாரம் இருக்கிறது. இறை வழிபாடு இருக்கிறது. பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவுக்கு பொருந்தாது. எங்கேயுமே அது பொருந்தாது.
பல தரப்பு மக்கள் வாழ்கிற நாடுகளில் அது பொருந்தாது. ஆனால், பிரதமர் நாட்டின் பிரதான பிரச்சினைகளை விட்டுவிட்டு இந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்தியிருக்கிறார். காங்கிரசும் மதசார்பற்ற சக்திகளும் அதை சரியான திசையில் எதிர்க்கும் பதில் கூறுவார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். மணிப்பூருக்கு ராகுல் காந்தி செல்வதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கூறுகிறார்கள்.

ராகுல் காந்தியை போன்ற புரட்சியாளர், சீர்திருத்தாவாதி இதுக்கெல்லாம் அஞ்சுவது இல்லை. பிரதமர் மோடி போகவில்லை. குறைந்த பட்சம் நானாவது போக வேண்டும் என்று என நினைக்கிறார். பிரதமர் மோடியால் அமெரிக்கா போக முடிகிறது. ஆனால் மணிப்பூர் சென்று அமைதியை நிலை நாட்ட முடியவில்லை. நடிகர் பிரகாஷ் ராஜ் மிகவும் பொருத்தமாக சொன்னார்.
வந்தே பாரத் ரயிலை ஸ்டேஷன் மாஸ்டர் கூட கொடி அசைத்து துவங்கி விடலாம். ஆனால், உங்களை தவிர வேறு யார் போனாலும் மணிப்பூரில் கலவரம் அடங்காது. கலவரத்தை அடக்குவதற்கான வழியையும் கண்டுபிடிக்க முடியாது. செய்ய வேண்டியதை செய்யாமல் தேவையற்றதை செய்கிறீர்களே இது நியாயமா என்று கேட்டார்? இதற்கு பிரதமர் மோடி பதில் சொல்லட்டும்" என்றார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications