Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய ஆயுதப் படைகளில் அக்னி வீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு.. மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சி.ஐ.எஸ்.எப், எல்லை பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை ஆகிய மத்திய படைகளில் கான்ஸ்டபிள் பணியிடங்களில் முன்னாள் அக்னி வீரர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க மத்திய உள்துறை அமைச்சம் முடிவு செய்துள்ளது.

இந்திய ராணுவத்தில் சேருவதற்கு அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தியது. ராணுவத்தில் இளைஞர்கள் தற்காலிகமாக பணி நியமனம் செய்யும் திட்டமாகவே இது கொண்டுவரப்பட்டது. அதாவது அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் ராணுவத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் பணி செய்ய முடியும்.

Exam Agnibad Central Govt

4 ஆண்டுகள் பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களுக்கு சேவை நிதி தொகுப்பு வழங்கப்படும். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மதிப்பீடுகள் செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள்.

சம்பளத்தை பொறுத்தவரை முதல் ஆண்டில் மாதம் ரூ.30 ஆயிரமும் கடைசி ஆண்டில் அதாவது 4-வது ஆண்டில் ரூ. 40 ஆயிரமும் வழங்கப்படும். ஆனால் இந்த சம்பளம் முழுமையாக வழங்கப்படாது. சம்பளத்தில் 30 சதவிகிதம் பிடித்தம் செய்யப்பட்டு சேவா நிதியாக மத்திய அரசு பங்களிப்புடன் பணி நிறைவு செய்யும் போது ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா 11.7 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

வரி எதுவும் பிடித்தம் செய்யப்படாது என்பன உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் அளித்தது. எனினும் அக்னிபாத் திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல, எதிர்க்கட்சிகளும் அக்னிபாத் திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் அக்னிபாத் திட்டம் இளைஞர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவது போன்றது என கடுமையாக சாடியிருந்தார்.

இந்த நிலையில், அக்னிபாத் வீரர்களுக்கு மேஜர் சலுகை ஒன்றை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது மத்திய பாதுகாப்பு படைகளில் நிரப்பப்படும் கான்ஸ்டபிள் பணியிடங்களில் 10 சதவீதம் அக்னி வீரர்களுக்கு ஒதுக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அது போக உடல் தகுதி தேர்விலும் முன்னாள் அக்னி வீரர்களுக்கு தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப்படைகளில் முன்னாள் அக்னி வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+