மத்திய ஆயுதப் படைகளில் அக்னி வீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு.. மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி!
டெல்லி: சி.ஐ.எஸ்.எப், எல்லை பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை ஆகிய மத்திய படைகளில் கான்ஸ்டபிள் பணியிடங்களில் முன்னாள் அக்னி வீரர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க மத்திய உள்துறை அமைச்சம் முடிவு செய்துள்ளது.
இந்திய ராணுவத்தில் சேருவதற்கு அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தியது. ராணுவத்தில் இளைஞர்கள் தற்காலிகமாக பணி நியமனம் செய்யும் திட்டமாகவே இது கொண்டுவரப்பட்டது. அதாவது அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் ராணுவத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் பணி செய்ய முடியும்.

4 ஆண்டுகள் பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களுக்கு சேவை நிதி தொகுப்பு வழங்கப்படும். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மதிப்பீடுகள் செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள்.
சம்பளத்தை பொறுத்தவரை முதல் ஆண்டில் மாதம் ரூ.30 ஆயிரமும் கடைசி ஆண்டில் அதாவது 4-வது ஆண்டில் ரூ. 40 ஆயிரமும் வழங்கப்படும். ஆனால் இந்த சம்பளம் முழுமையாக வழங்கப்படாது. சம்பளத்தில் 30 சதவிகிதம் பிடித்தம் செய்யப்பட்டு சேவா நிதியாக மத்திய அரசு பங்களிப்புடன் பணி நிறைவு செய்யும் போது ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா 11.7 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
வரி எதுவும் பிடித்தம் செய்யப்படாது என்பன உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் அளித்தது. எனினும் அக்னிபாத் திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல, எதிர்க்கட்சிகளும் அக்னிபாத் திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் அக்னிபாத் திட்டம் இளைஞர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவது போன்றது என கடுமையாக சாடியிருந்தார்.
இந்த நிலையில், அக்னிபாத் வீரர்களுக்கு மேஜர் சலுகை ஒன்றை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது மத்திய பாதுகாப்பு படைகளில் நிரப்பப்படும் கான்ஸ்டபிள் பணியிடங்களில் 10 சதவீதம் அக்னி வீரர்களுக்கு ஒதுக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அது போக உடல் தகுதி தேர்விலும் முன்னாள் அக்னி வீரர்களுக்கு தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப்படைகளில் முன்னாள் அக்னி வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications