நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட தயாராகும் திஹார் சிறை- துக்கிலிடும் ஊழியர் வருகை- நாளை ஒத்திகை!
டெல்லி: நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 20-ந் தேதி தூக்கிலிடுவதற்கு டெல்லி திஹார் சிறை தயாராகி வருகிறது. 4 பேரையும் தூக்கிலிடும் ஊழியர் பவான் ஜல்லாத் திஹார் சிறைக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார். நாளை சிறையில் ஒத்திகை நடைபெற உள்ளது.
நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனை நிறைவேற்றம் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. பல்வேறு சட்ட காரணங்களை முன்வைத்து 4 பேரும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு தடை பெற்று வருகின்றனர்.

இன்னொருபக்கம் நிர்பயாவின் தாயார் உள்ளிட்டோர் குற்றவாளிகளை தூக்கிலிடும் வரை ஓய்வதில்லை என கூறி வருகின்றனர். இந்த நிலையில் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவண் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார்சிங் ஆகியோருக்கு வரும் 20-ந் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இவர்களைத் தூக்கிலிடுவதற்காக சிந்தி ராம் என்ற பவான் ஜல்லாத் திஹார் சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். டெல்லி திஹார் சிறையில் நாளை சிந்தி ராம், 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான ஒத்திகையை மேற்கொள்ள இருக்கிறார்.
பவன் ஜல்லாத் குடும்பத்தினர் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தே தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியர்களாக பணியாற்றினர். தற்போது பவான் ஹல்லாத், 4-வது தலைமுறையைச் சேர்ந்தவர். தற்போதும் கூட நிர்பயா கொலை குற்றவாளிகள் தங்களுக்கான தூக்கு தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தை அணுகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்ஷய் குமார் மீண்டும் கருணை மனு
இதனிடையே நிர்பயா கொலை குற்றவாளி அக்ஷ்யகுமார் 2-வது முறையாக கருணை மனுவை அனுப்பியுள்ளார். இம்மனுவை டெல்லி அரசு, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க இருக்கிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications