உஜ்வாலா சமையல் எரிவாயுவுக்கான மானியம்.. மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கேஸ் சிலிண்டர்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மானியம் நீட்டிப்பு குறித்து முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், "இந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 10.27 கோடிக்கும் அதிகமானோர் உஜ்வாலா திட்டத்தின் சமையல் எரிவாயு சிலிண்டரை பெற்று வருகின்றனர்.

Extension of subsidy under Ujjwala scheme for gas cylinders by one more year

இவர்களுக்கு கடந்த ஆண்டு மானிய தொகை ரூ.200லிருந்து ரூ.300ஆக மத்திய அரசு உயர்த்தியிருந்தது. எனவே டெல்லியில் ஒரு சிலிண்டரை ரூ.603க்கு பெற்றுக்கொள்ள முடியும். இந்நிலையில் இந்த ரூ.300 மாானிய தொகையை மேலும் ஓராண்டுக்கு நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. 2024-25 நிதியாண்டில் இதற்காக அரசு ரூ.12,000 கோடியை செலவழிக்கும். கடந்த 2020ஐவிட தற்போது ரீஃபில்களில் கணிசாமாக அதிகரித்துள்ளன" என்று கூறியுள்ளார்.

லோக்சாப தேர்தல் நெருங்கும் நிலையில், கேஸ் சிலிண்டர்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் மானியம் நீட்டிக்கப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+