நம் விவசாயிகள் எப்படி துரோகிகளாக இருக்க முடியும் - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கேள்வி
நம் விவசாயிகள் எப்படி துரோகிகளாக இருக்க முடியும். ஆனால் அவர்கள் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி: நம் நாட்டின் விவசாயிகள் மகிழ்ச்சி அற்றவர்கள். 90 நாட்களுக்கும் மேலாக அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் டெல்லி அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நம் விவசாயிகள் எப்படி துரோகிகளாக இருக்க முடியும். ஆனால் அவர்கள் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
டெல்லி எல்லையில் 96வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடும், குளிர் மழையை பொருட்படுத்தாமல் 96 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் பல எல்லைகளில் 3 மாதத்துக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஜனவரி 26ம் தேதியன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அந்த பேரணியின்போது பெரும் வன்முறை ஏற்பட்டது. மேலும் டெல்லியின் செங்கோட்டையில் போலீஸ் தடுப்பை மீறி நுழைந்த போராட்டக்காரர்கள் தங்களது அமைப்பு கொடியை ஏற்றினர்.
இதனிடையே மீரட்டில் நடைபெற்ற விவசாயிகள் மகா பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்து கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி செங்கோட்டை சம்பவம் மத்திய அரசின் சதி என்றும் செங்கோட்டை வன்முறையின் பின்னணியில் மத்திய அரசு உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
டெல்லி சாலைகளை தெரியாத விவசாயிகளை மத்திய அரசு தவறாக வழி நடத்தியது என்று கூறிய கெஜ்ரிவால், டெல்லி யூனியன் பிரதேசத்தின் முதல்வர் நான் என்பதால், விவசாயிகளின் டிராக்டர் பேரணி மேற்கொண்ட நாளில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டின் விவசாயிகள் மகிழ்ச்சி அற்றவர்கள். 90 நாட்களுக்கும் மேலாக அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் டெல்லி அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காலத்தில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். ஆனால் மத்திய அரசு இது குறித்து எதுவும் செய்யவில்லை.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கூட சந்திக்காத அட்டூழியங்களை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்கொண்டனர். இப்போது போராட்டக்காரர்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. நம் விவசாயிகள் எப்படி துரோகிகளாக இருக்க முடியும். ஆனால் அவர்கள் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் வேதனையுடன் பேசியுள்ளார் கெஜ்ரிவால்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications