ஓயப்போவதில்லை.. கோரிக்கை நிறைவேறாமல் விவசாயிகள் வீடு திரும்ப போவதில்லை.. ராகேஷ் திகைத் அறிவிப்பு
டெல்லி: விவசாய சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தும் விவசாயிகள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வீடு திரும்ப மாட்டார்கள் என்று பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) தலைவர் ராகேஷ் திகைத், திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
விவசாய போராளிகளின் ஹீரோவாக மாறியுள்ளவர் ராகேஷ் திகைத். இன்று விவசாயிகள் நடத்திய 3 மணி நேர சக்கா ஜாம் போராட்டத்திற்கு பிறகு, டெல்லி-உத்தரப்பிரதேச எல்லையில் உள்ள காசிப்பூரில் கூடியிருந்த விவசாயிகளிடம் உரையாற்றினார் ராகேஷ் திகைத்.

"எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாங்கள் வீடு திரும்ப மாட்டோம்" என்று அப்போது அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
"3 விவசாய சட்டங்களை ரத்து செய்ய அக்டோபர் 2ம் தேதி வரை நாங்கள் அரசாங்கத்திற்கு அவகாசம் அளித்துள்ளோம். இதன் பின்னரும் அரசு இறங்கிவராவிட்டால், அடுத்தகட்ட போராட்டத்திற்கு திட்டமிடுவோம். பேச்சு வார்த்தைக்கு வாங்க என்று அரசுக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்க மாட்டோம்" என்று அவர் மேலும் கூறினார்.
3 சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், தீர்வுக்கு பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளது, ஆனால் விவசாயிகள் மத்திய அரசுடன் மட்டுமே பேச்சு வார்த்தை நடத்துவோம் என கூறிவிட்டனர். இந் நிலையில் பிரச்சினை தீரும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளதால், இப்பிரச்சினை மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சர்வதேச அளவில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், விவசாயிகள் போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications