அரசு அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்... நிபந்தனைகள் அதேதான்- விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத்
டெல்லி: மத்திய அரசு அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற்றாக வேண்டும் என்கிற நிபந்தனையை மீண்டும் முன்வைப்போம் என்றும் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு என்பது 1.60 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.

இந்த நிலையிலும் டெல்லியில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடருகிறது. டெல்லி எல்லைகளில் 6 மாதங்களாக இந்த போராட்டம் நீடித்து வருகிறது.
இதனிடையே விவசாயிகளுடன் மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்கிற கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் கூறுகையில், ஜனவரி 22-ந் தேதியன்று மத்திய அரசுடன் கடைசியாக பேச்சுவார்த்தை நடத்தினோம். மத்திய அரசு மீண்டும் அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராக இருக்கிறோம்.
அதேநேரத்தில் 3 கறுப்பு விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற நிபந்தனைகளைத்தான் நாங்கள் மீண்டும் முன்வைப்போம். கொரோனா பரவலை முன்வைத்து எங்களது போராட்டத்தை நீர்த்து போக செய்துவிட முடியாது என்றார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications