தீவிரமாகும் போராட்டம்... நாடு முழுவதும் 18-ம் தேதி ரெயில் மறியல்... விவசாயிகள் அதிரடி அறிவிப்பு!
டெல்லி: வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி வருகிற 18-ம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் ரெயில் மறியலில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை கவுரவிக்கும் வகையில் பிப்ரவரி 14-ம் தேதி நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி அணிவகுப்பு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 70 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 70 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் எதிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை.

டிராக்டர் பேரணி
இதற்கிடையே டெல்லியில் குடியரசு தினம் அன்று நடந்த டிராக்டர் பேரணியில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. பேரணி பாதை மாறியதால் போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லியே பதற்றமாக இருந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

போராட்டத்தை தீவிரமாக்க முடிவு
டெல்லியின் திக்ரி உள்ளிட்ட பல்வேறு எல்லைப்பகுதியில் போராட்டம் தொடந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்கம் சார்பில் கூட்டம் நடந்தது. இதில் இந்த போராட்டங்களை அடுத்தகட்டமாக தீவிரப்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது .

ரெயில் மறியல்
வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி வருகிற 18-ம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் ரெயில் மறியலில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 12 முதல் ராஜஸ்தானில் அனைத்து சாலை சுங்கச்சாவடிகளையும் வாகனங்களை இலவசமாக விடுவிக்க முடிவு செய்துள்ளனர். புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை கவுரவிக்கும் வகையில் பிப்ரவரி 14-ம் தேதி நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி அணிவகுப்பு நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக ம்யுக்தா கிசான் மோர்ச்சா கூறியுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications