உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த தீவிர பிரசாரம்- விவசாயிகள் ராகேஷ் திகாயத்
டெல்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியை (பா.ஜ.க.) வீழ்த்துவதற்காக தீவிர பிரசாரம் மேற்கொள்வோம் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பஞ்சாப், ஹரியானா, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 8 மாதங்களாக இந்த போராட்டம் தொடருகிறது.
ஆனால் மத்திய அரசு சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது. இருப்பினும் விவசாய சட்டங்களை திரும்பப் பெற வைக்காமல் சொந்த மாநிலங்களுக்கு திரும்பப் போவதில்லை என்பதில் விவசாயிகள் திட்டவட்டமாக உள்ளனர்.

மே.வ. தேர்தல்
இதனிடையே டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் கூறியதாவது: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்தோம். அதனால் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டது.

உ.பி, உத்தரகாண்ட் தேர்தல்
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்களிலும் இதே வியூகத்தை பின்பற்றுவோம். இந்த 2 மாநிலங்களிலும் பா.ஜ.க.வை எந்த கட்சியால் வீழ்த்த முடியுமோ அந்த கட்சிக்கு அல்லது அணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம். இனி எங்கள் போராட்டம் லக்னோவுக்கு செல்லும் பாதைகளை மறித்து நடைபெறும்.

அடுத்த கட்ட போராட்டம்
டெல்லியில் 8 மாதங்களாகப் போராடி போராடி களைத்துப் போய்விட்டோம் என்று மத்திய பா.ஜ.க. அரசு கருதுகிறது. இதனால் எங்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிடுவோம் என நினைக்கிறது மத்திய அரசு. இப்போதுதான் எங்கள் போராட்டம் விரிவடைந்துள்ளது. இருப்பினும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து எந்த திட்டமும் இல்லை.

பாஜகவுடன் யுத்தம்
நாங்கள் பா.ஜ.க.வுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்திருக்கிறோம். இந்த தேசத்தின் விவசாயிகளின் ஒரு வாக்கு கூட பா.ஜ.கவு.க்கு விழக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் தேர்தல்களுக்கான வியூகம் தொடர்பாக செப்டம்பர் 5-ந் தேதி உ.பி.யின் முசாஃபர்நகரில் முதலாவது மகா பஞ்சாயத்து கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு ராகேஷ் திகாயத் தெரிவித்தார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications