மன்னித்து விடுங்கள்... என் உடல் யமுனை நதி பாலத்தில் கிடக்கும் - மகனின் விபரீத முடிவு
எனது உடல் யமுனை ஆற்றுப்பாலத்திற்கு கீழே கிடக்கும் என்று பெற்றோர்களுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பிவிட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளான் ஒரு இளைஞன். டெல்லியில் நடந்த இந்த சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்ச
Recommended Video
டெல்லி: அம்மா அப்பா என்னை மன்னித்து விடுங்கள் எனது எனது உடல் யமுனை ஆற்றுப்பாலத்திற்கு கீழே கிடக்கும் என்று பெற்றோர்களுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பிவிட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளான் டெல்லியைச் சேர்ந்த ஒரு இளைஞன்.
பிள்ளைகள் மேல் நாம் எவ்வளவு தான் பாசத்தை கொட்டி வளர்த்தாலும் பெற்றோர்கள் மேல் இல்லாத அன்பும் பாசமும் தன் நண்பர்கள் மேல் வந்துவிடுகிறது. பெற்றோர்கள் சொன்னால் காது குடுத்து கூட கேட்க மாட்டார்கள் அதே நேரத்தில் நண்பர்கள் சொன்னால் உயிரையும் விடுவார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது.

டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் பகுதியில் தனது குடும்பத்தோடு வசித்து வந்தவர் ஹர்ஸ் கண்டேல் வால். திருமணமான அக்கா மாமா என மகிழ்ச்சியான குடும்பம் அவர்களுடையது. ஹர்ஸ் வீட்டிற்கு ஒரே ஆண் பிள்ளை என்பதால் செல்லம் கொஞ்சம் அதிகம். ஆன்லைன் நிறுவனத்தில் டெலிவரி பாய் வேலை செய்து வந்த ஹர்ஸ் சில தினங்களுக்கு முன்பு ஹர்ஸ் பெற்றோர்களுக்கு ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் வந்துள்ளது.
அதில் அம்மா அப்பா என்னை மன்னிட்டு விடுங்கள். என் உடல் யமுனை நதியின் பாலத்திற்கு கீழே கிடக்கும் என்று அதில் இருக்கவே அதிர்ச்சியடைந்த பெற்றோர் அலறியடித்துக்கொண்டு அங்கே சென்றனர். ஆனால் அங்கே உடல் இல்லை. உடைகள் மட்டுமே இருந்தன. ஸ்கூட்டர் பர்ஸ் கிடந்துள்ளது. ஹர்ஸ் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் போகவே இந்திரபிஸ்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரித்த போது இரண்டு நாட்கள் கழித்து ஹர்சின் உடல் குப்பைகளுக்கு நடுவே கிடப்பதாக குப்பை பொறுக்குபவர்கள் தகவல் கூறினர். அங்கே குப்பைகளுக்கு நடுவே இருந்த ஹர்ஸ் சடலத்தை மீட்டனர். ஜூன் 30ஆம் தேதி நண்பனின் மனைவி பிறந்தநாளைக் கொண்டாட முர்த்தால் என்ற பகுதிக்கு நண்பர்களுடன் சென்றார் ஹர்ஸ். ஜூலை 1ஆம் தேதி காலையில் பெற்றோரிடம் பேசிய அவர், திடீரென சில மணிநேரத்தில் அப்படி ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
ஹர்ஸ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் கூறியுள்ளனர். இதனையடுத்து ஹர்ஸின் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஹர்ஸ் மர்ம மரணம் கொலையா? தற்கொலைதானா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பார்ட்டியில் நடந்தது என்ன என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications