எதிர்க்கட்சிகள் ஓகே...முன்கூட்டியே முடிகிறதா பட்ஜெட் கூட்டம்
டெல்லி : பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 15 க்கு பதிலாக, 2 நாட்கள் முன்தாக பிப்ரவரி 13 ம் தேதியே முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் 2 பகுதிகளாக நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 29 ம் தேதி ஜனாதிபதி உரையுடன் துவங்கி, தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 15 வரை நடைபெற உள்ளதாகவும், 2 வது பகுதி மார்ச் 8 ம் தேதி துவங்கி, ஏப்ரல் 8 வரை நடைபெறும் என்றும் முதலில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் ராஜ்யசபா அமர்வு பிப்ரவரி 13 உடன் நிறைவடைய உள்ளதால், பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியும் பிப்ரவரி 15 க்கு பதிலாக பிப்ரவரி 13 ம் தேதியே முடிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பட்ஜெட் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்திலும் இது பற்றி பேசப்பட்டதாக கூறப்படுகிறது. பட்ஜெட் தொடரை சுமூகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என ராஜ்யசபா தலைவர் வெங்ககைய்யா நாயுடு கோரிக்கை வைத்துள்ளார். இதனை ஏற்க அனைத்து கட்சி தலைவர்களும், அனைத்து விவாதங்களின் போதும் முழு ஒத்துழைத்து தருவதாக உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்கள் என 25 பேர் இதில் பங்கேற்றுள்ளனர். குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் போது பட்ஜெட் குறித்து விவாதிக்க அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என அனைத்து கட்சிகள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி பரிசீலிப்பதாக வெங்கைய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
விவாதத்தின் போது அனைத்து உறுப்பினர்களும் பேசுவதற்கு வாய்ப்பளிப்பதற்காக, மசோதாக்களை தாக்கல் செய்யும் போது அது பற்றி சுருக்கமாக அமைச்சர்கள் பேசும்படியும் வெங்ககைய்யா கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications