6.81 கோடி இலவச எரிவாயு சிலிண்டர்கள் பெற்றுள்ளனர்.. நிர்மலா சீதாராமன் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 6.81 கோடி இலவச எரிவாயு சிலிண்டர்கள் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கொரோனா நெருக்கடியால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் ரூ. 20 லட்சம் கோடி பொருளாதார சிறப்பு தொகுப்பை வெளியிட்டார். இதற்கான திட்டங்கள் குறித்து கடந்த 4 நாட்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.

FM Nirmala Sitharaman says 6.81 crore people free LPG cylinders

அந்த வகையில் இன்றைய தினம் இறுதி அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், சுகாதாரம் மற்றும் கல்வி, தொழில் மற்றும் கொரோனா, எளிதாக தொழில் செய்வது, பொதுத் துறை நிறுவனங்கள், மாநில அரசு வளங்கள் உள்ளிட்ட 7 துறைகளுக்கான அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

அப்போது அவர் கூறுகையில் 8.19 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ 2 ஆயிரம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஜன்தன் வங்கிக் கணக்குகள் உள்ள 20 கோடி பெண்களுக்கு ரூ 10 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. 2.2 கோடி கட்டடத் தொழிலாளர்களுக்கு ரூ 3, 950 கோடி வழங்கப்பட்டுள்ளது.

6.81 கோடி பெண்கள் இலவச கேஸ் சிலிண்டர்களை பெற்றுள்ளனர். 12 லட்சம் பி.எப். சந்தாதாரர்கள் ஆன்லைனில் பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர் என்றார் நிர்மலா சீதாராமன்.

Recommended Video

    அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்படும்- நிர்மலா சீதாராமன் அதிரடி

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+