Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவிஷீல்டு தடுப்பூசி.. 10 லட்சத்தில் 7 பேருக்கு மட்டுமே பாதிப்பு! ICMR முன்னாள் விஞ்ஞானி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி செத்திக்கொண்டவர்களுக்கு ரத்த உறைதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படியான பிரச்னை 10 லட்சத்தில் 7 பேருக்கு மட்டுமே ஏற்பட வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிலிருந்து இப்போது வரை இந்த வைரஸ் 70 லட்சம் மக்களை கொன்று குவித்திருக்கிறது. 70 கோடிக்கும் அதிகமானோரை பாதித்திருக்கிறது. இருப்பினும் இதற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து பெரும் பலனை கொடுத்தது. கொரோனா வைரஸ் பல்வேறு திரிபுகளை அடைந்தாலும், இந்த தடுப்பு மருந்து ஓரளவுக்கு பலன் கொடுத்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று தடுப்பூசி குறித்த விவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன.

Former ICMR scientist explains that covishield vaccine will affect only 7 out of 10 lakh people

குறிப்பாக கோவிஷீல்டு தடுப்பூசி அரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனமும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் இணைந்து இந்த தடுப்பூயை உருவாக்கியது. இதனை சீரம் இஸ்ட்டிட்யூட் ஆஃப் இந்தியா தயாரித்தது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை மத்திய அரசு இரண்டு தவணைகளாக இலவசமாக வழங்கியது. சுமார் 200 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்த தடுப்பூசி தயாரித்த ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பான விசாரணையில் பிரிட்டன் நீதிமன்றத்தில் இந்நிறுவனம் சில விவரங்களை தாக்கல் செய்தது. அதில், கோவிஷீல்டு தடுப்பூசி அரிதாக ரத்த உறைதல், ரத்த தட்டுக்கள் குறைதல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருக்கிறது. இது இந்தியாவில் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

ஆனால், இது குறித்து பயப்பட வேண்டாம் என்று தொற்று நோயியல் நிபுணரும், ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானியுமான டாக்டர் ராமன் கங்ககேத்கர் கூறியுள்ளார்.

"முதல் டோஸ் செலுத்திக்கொள்ளும்போது பக்கவிளைவுகளுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இதே இரண்டு மற்றும் மூன்றாவதாக செலுத்தப்படும் பூஸ்டர் டோஸ்களுக்கு பிறகு முற்றிலுமாக குறைந்துவிடும். மட்டுமல்லாது, பக்கவிளைவுகள் ஏற்படுவதாக இருந்தால் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இரண்டு முதல் மூன்று மாதங்களிலேயே தெரிந்துவிடும். அதிலும் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 10 லட்சத்தில் வெறும் 7 பேருக்கு மட்டுமே இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.

கோவிஷீல்டு தடுப்பூசியில் ஆபத்தை விட நன்மைகள் அதிகமாக இருக்கின்றன. சாதாரணமாக ஏற்படும் விபத்தில் கூட ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படலாம். எனவே இது குறித்து கவலை கொள்ள தேவையில்லை" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+