கோவிஷீல்டு தடுப்பூசி.. 10 லட்சத்தில் 7 பேருக்கு மட்டுமே பாதிப்பு! ICMR முன்னாள் விஞ்ஞானி விளக்கம்
டெல்லி: கொரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி செத்திக்கொண்டவர்களுக்கு ரத்த உறைதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படியான பிரச்னை 10 லட்சத்தில் 7 பேருக்கு மட்டுமே ஏற்பட வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிலிருந்து இப்போது வரை இந்த வைரஸ் 70 லட்சம் மக்களை கொன்று குவித்திருக்கிறது. 70 கோடிக்கும் அதிகமானோரை பாதித்திருக்கிறது. இருப்பினும் இதற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து பெரும் பலனை கொடுத்தது. கொரோனா வைரஸ் பல்வேறு திரிபுகளை அடைந்தாலும், இந்த தடுப்பு மருந்து ஓரளவுக்கு பலன் கொடுத்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று தடுப்பூசி குறித்த விவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன.

குறிப்பாக கோவிஷீல்டு தடுப்பூசி அரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனமும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் இணைந்து இந்த தடுப்பூயை உருவாக்கியது. இதனை சீரம் இஸ்ட்டிட்யூட் ஆஃப் இந்தியா தயாரித்தது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை மத்திய அரசு இரண்டு தவணைகளாக இலவசமாக வழங்கியது. சுமார் 200 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த தடுப்பூசி தயாரித்த ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பான விசாரணையில் பிரிட்டன் நீதிமன்றத்தில் இந்நிறுவனம் சில விவரங்களை தாக்கல் செய்தது. அதில், கோவிஷீல்டு தடுப்பூசி அரிதாக ரத்த உறைதல், ரத்த தட்டுக்கள் குறைதல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருக்கிறது. இது இந்தியாவில் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
ஆனால், இது குறித்து பயப்பட வேண்டாம் என்று தொற்று நோயியல் நிபுணரும், ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானியுமான டாக்டர் ராமன் கங்ககேத்கர் கூறியுள்ளார்.
"முதல் டோஸ் செலுத்திக்கொள்ளும்போது பக்கவிளைவுகளுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இதே இரண்டு மற்றும் மூன்றாவதாக செலுத்தப்படும் பூஸ்டர் டோஸ்களுக்கு பிறகு முற்றிலுமாக குறைந்துவிடும். மட்டுமல்லாது, பக்கவிளைவுகள் ஏற்படுவதாக இருந்தால் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இரண்டு முதல் மூன்று மாதங்களிலேயே தெரிந்துவிடும். அதிலும் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 10 லட்சத்தில் வெறும் 7 பேருக்கு மட்டுமே இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.
கோவிஷீல்டு தடுப்பூசியில் ஆபத்தை விட நன்மைகள் அதிகமாக இருக்கின்றன. சாதாரணமாக ஏற்படும் விபத்தில் கூட ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படலாம். எனவே இது குறித்து கவலை கொள்ள தேவையில்லை" என்று கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications