பரிந்துரைத்த அதிகாரிகள் மீதே தவறு இல்லை எனில் ப.சிதம்பரம் மீது மட்டும் எப்படிதவறு? மன்மோகன்சிங்
Recommended Video
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் பரிந்துரைத்த அரசு அதிகாரிகள் மீது எந்த தவறும் இல்லை எனில் அந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்து போட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது மட்டும் எப்படி குற்றம் சுமத்த முடியும்? என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு முறைகேடாக அன்னிய முதலீடு பெற்றுக் கொடுத்தார் சிதம்பரம் என்பது குற்றச்சாட்டு. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து திஹார் சிறையில் அடைத்துள்ளது.

இவ்வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனுத் தாக்கல் செய்துள்ளார். திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆகியோர் திஹார் சிறையில் சிதம்பரத்தை நேற்று சந்தித்து பேசினர். இச்சந்திப்பு குறித்து ட்விட்டர் பக்கத்தில் சிதம்பரம் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மன்மோகன்சிங் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எமது நண்பர் ப.சிதம்பரம் நீண்டநாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் நீதிமன்றம் நியாயமான தீர்ப்பு வழங்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நமது அரசு விதிகளின்படி எந்த ஒரு தனிநபரும் எந்த முடிவையும் எடுத்துவிட முடியாது.
அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்து ஆலோசித்து பின்னர் முடிவுகள் எடுக்கப்படும். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கும் வழக்கிலும் கூட அதிகாரிகள், அரசு செயலாளர்கள் மொத்தம் 6 பேர் கூட்டாக பரிந்துரைத்துள்ளனர். அந்த பரிந்துரைக்குத்தான் சிதம்பரம் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். பரிந்துரைத்த அந்த அதிகாரிகளே தவறு செய்யவிலை எனில் ஒப்புதல் அளித்த அமைச்சர் மீது மட்டும் எப்படி குற்றம் சுமத்த முடியும்?
அதிகாரிகளின் பரிந்துரைகளை அங்கீகரிப்பதற்கு அமைச்சர்கள் பொறுப்பேற்க நேரிட்டால் ஒட்டுமொத்த அரசாங்க கட்டமைப்புமே சரிந்துவிடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications