"அடடே மோடி என்ன அழகு.." பிரதமரை பார்த்ததும் ஆனந்த கண்ணீர் விட்ட இளம்பெண்! நெகிழ்ச்சி சம்பவம்
டெல்லி: பிரதமர் மோடியின் பேச்சை கேட்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஆனந்தக் கண்ணீர் விட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றிருந்தார். இந்தப் பயணத்தின் போது பிரான்ஸ் அதிபர் இம்மாணுவேல் மாக்ரோனை சந்தித்து பிரதமர் மோடி பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

மேலும், வணிகம், பாதுகாப்பு எனப் பல துறைகளில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் ஜெட்கள், நீர்மூழ்கிக் கப்பல்களையும் இந்தியா வாங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடி: முன்னதாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிரதமர் மோடி இந்தியர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பல்வேறு விஷயங்கள் குறித்தும் உரையாற்றினார். அப்போது அங்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவத்தின் வீடியோ தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த வியாழன் (ஜூலை 13) அங்குள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர் விசா தொடங்கி தனக்கும் பிரான்ஸிற்கும் இடையே இருக்கும் உறவு வரை பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசினார். அங்கு வந்திருந்த இந்தியர்கள் பிரதமரின் பேச்சை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். அப்போது அங்கிருந்த பெண் ஒருவருக்கு அவரையே அறியாமல் ஆனந்தக் கண்ணீர் வந்துள்ளது.
ஆனந்த் கண்ணீர்: பிரதமர் மோடியின் பேச்சை கேட்ட அந்த பெண்ணால் தனது மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பிரதமர் பேச்சைக் கேட்டு அந்த பெண் ஆனந்தக் கண்ணீர் விடும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது தொடர்பாக அந்த பெண் கூறுகையில், "பிரதமர் மோடி தனது இதயத்திலிருந்து பேசினார், அது ஒரு அழகான பேச்சு.. பிரதமர் மோடியின் முகம் ஒளிர்ந்தது. அந்தளவுக்கு அவரது முகம் பிரகாசமானது" என்று தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் மேடையில் இருந்த மோடி பேசும் போது அதைக் கேட்டு இவர் கண்ணீர் விட்ட வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் பெண் இது தொடர்பாக மேலும் கூறுகையில், "நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். மோடியைப் பார்த்ததும் என் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது. இது ஒரு அழகான பேச்சு என்று நினைக்கிறேன். அவர் தனது இதயத்திலிருந்து பேசினார். எங்களை மிகவும் கவர்ந்தது மோடியின் முகம் மிகவும் பிரகாசமாக இருந்தது" என்று அவர் தெரிவித்தார்.
பிரான்ஸில் யுபிஐ: முன்னதாக அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பல முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் அப்போது பேசுகையில், "பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்தியர்களால் தான் இந்தியா- பிரான்ஸ் கூட்டாண்மை வலுப்பெறுகிறது. காலநிலை மாற்றம்,, சர்வதேச வினியோக சங்கிலி, எல்லை கடந்த பயங்கரவாதம் ஆகியவற்றில் உலக நாடுகள் இந்தியாவிடம் இருந்து கற்கப் பல விஷயங்கள் உள்ளன. இந்தியாவும் பிரான்சும் நீண்ட காலமாகத் தொல்பொருள் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன" என்றார்.
மேலும், பிரான்ஸ் நாட்டில் யுபிஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், விரைவில் அது ஈபிள் கோபுரத்தில் இருந்து தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
-
ஜி போதும் இறங்குங்க! ரோடு ஷோ முடிந்தும் கவனிக்காமல் இருந்த எடப்பாடி.. அலர்ட் செய்த மோடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு












Click it and Unblock the Notifications