வாக்குக்காக இலவசங்கள்.. மாநில நிதிநிலைமையை சீரழிக்கிறது.. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு!
டெல்லி: தேர்தலில் வாக்குகளுக்காக இலவசங்கள் வழங்கும் கலாச்சாரம், பல்வேறு மாநிலங்களின் நிதிநிலை மோசமடைந்து வருவதற்கு வழிவகுத்துள்ளதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
Recommended Video

நாட்டின் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். இதனைத்தொடர்ந்து ஜெகதீப் தன்கர் நாளை பதவி ஏற்கவுள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில், 2018 மற்றும் 2019-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய செய்தி தொடர்பு அதிகாரிகள் கூட்டத்தில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசினார். இதில் வெங்கையா நாயுடு பேசுகையில், அரசுக்கும், மக்களுக்கும் இடையே செய்தி தொடர்பு அதிகாரிகள் பாலமாக இருக்க வேண்டும். அரசின் கொள்கைகள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்து மக்களுக்கு அவரவர் தாய்மொழியில் உடனுக்குடன் செய்தி போய்ச்சேர வேண்டும்.
அதுபோல், மக்களின் எதிர்பார்ப்புகளையும், உணர்வுகளையும் அரசுக்கு உடனுக்குடன் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள் தான். அதன் நடுநிலைமை, புறநிலை மற்றும் நேர்மை ஆகியவை இந்தியாவின் ஜனநாயகம் உயிருடன் இருப்பதற்கு முக்கியமானதான இருக்கிறது. சமூக வலைத்தளங்களின் பெருக்கத்தால், உடனடி இதழியல் என்ற போக்கு அதிகரித்து வருகிறது. இதனால், இதழியல் தர்மம் அழிந்து வருவது கவலைக்குரியது.
வாக்குகள் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் இலவசங்களை அளித்து வருகின்றன. இந்த இலவச கலாசாரம், மாநிலங்களின் நிதிநிலைமையை சீரழித்துவிடும். ஏழைகளுக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் அரசு நிச்சயம் உதவ வேண்டும். அதே சமயத்தில், சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இயற்கையை நாம் நேசித்தால், இயற்கை நம்மை பாதுகாக்கும்.
சாதாரண விவசாயி மகனாக இருந்து நாட்டின் இரண்டாவது உயரிய பதவிக்கு தான் வந்ததற்கு எனது கடின உழைப்பு, ஒரே மனநிலை கொண்ட அர்ப்பணிப்பு உணர்வு, தொடர் பயணம், மக்களுடன் உரையாடல் ஆகியவைதான் காரணம். நான் மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடியதால் அதிகம் கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்தார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications