இந்து திருவிழாக்களை சீர்குலைக்க தொடரும் சதி.. கும்பமேளாவிலும் தொடர்கிறது
டெல்லி: இந்துக்களின் திருவிழா பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படும் இந்தியாவின் பாரம்பரியமிக்க கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. அப்படி கொண்டாடப்படும் திருவிழாக்களில் சிலர் வேண்டுமென்றே இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
கடந்த ஜனவரி 12 ஆம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரக்யராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள தப்தி – கங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற பயணிகள் மீது மகாராஷ்டிரா அருகே தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து பண்டிகைகளை குறிவைத்து நடைபெறும் வன்முறைகள் பதற்றத்தை அதிகரித்து கொண்டிருக்கின்றன.

உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரக்யராஜில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. மகா கும்பமேளா திருவிழா உலகளவில் கவனம் ஈர்த்த நிகழ்வு. இதில் கலந்து கொள்வதற்காக மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட்ட ரயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் பல பெட்டிகள் சேதமடைந்துள்ளன. இதுதொடர்பாக பிரதமர், ரயில்வே அமைச்சர் ஆகியோரிடம் தங்களுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க சொல்லி பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த சம்பவத்தை நினைவு கூறும் பயணி ஒருவர், கும்பமேளாவுக்காக புறப்பட்ட முதல் பக்தர்கள் ரயில் இதுதான். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்.
கற்களை வீசி ரயில் பெட்டிகளை உடைத்தனர். கொஞ்சம் விட்டிருந்தாலும் கடுமையான காயம் ஏற்பட்டிக்கும். அதனால் அரசு எங்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும். என்றார். இது ஏதோ முதல்முறை நடத்தப்படும் தாக்குதல் அல்ல. இதேபோல கடந்த 2024 ஆம் ஆண்டு அயோத்தி கோயில் உள்ளிட்ட சில நிகழ்வுகளின்போதும் சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தினர்.
2002 மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்பிய கோத்ரா ரயில் எரிக்கப்பட்டு 59 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்துக்களின் பண்டிகை மீது வேண்டுமென்றே பிரிவினை ஏற்படுத்த தாக்குதல் நடத்தப்படுவது கவலையளிக்கிறது. ராம் நவமி, அனுமன் ஜெயந்தி, துர்கா பூஜை என்று பல திருவிழாக்கள் மீது தொடர்ந்து வன்முறை நடத்தப்படுகிறது.
கடந்த 2024 அக்டோபர் மாதம் உத்தரப்பிரதேசம் மாநிலம், பஹ்ராய்ச் பகுதியில் இந்து மதம் சார்ந்த பண்டிகையில் கலந்து கொண்டு திரும்பிய 22 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் அரசு நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டதாகவே விமர்சனம் வைக்கப்படுகிறது.
சில அரசியல் கட்சிகள் தங்களின் வாக்கு வங்கிக்காக இந்துக்களின் பண்டிகையில் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் புகார் உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் மொகரம் பண்டிகைக்காக துர்கா பூஜை கொண்டாட்டத்துக்கு அம்மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்தது சர்ச்சையானது.
இது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படும் விஷயமாக உருவெடுத்துள்ளது. ரயில் பாதைகளில் ஆக்கிரமிப்பும் கவலையளிப்பதாக உள்ளது. அங்கிருந்து தான் சமூக விரோத நடவடிக்கைகள் அரங்கேற்றப்படுகின்றன. பாரபட்சம் இல்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
மகா கும்பமேளா விழா என்பது மத நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் நாட்டின் பெருமை மிகு அடையாளமாக உள்ளது. உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அதில் கலந்து கொள்வார்கள். இது வெறும் பயணிகள் மீது நடத்தப்படும் தாக்குதல் அல்ல. நாட்டின் ஒற்றுமை மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications