ஈரான் சொன்ன பாசிட்டிவ் நியூஸ்.. ஆனா பாருங்க இந்தியாவில் பதற்றம் குறையல! நேற்று குஜராத், இன்று அசாம்!
டெல்லி: ஹார்முஸ் நீரிணை இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்காக நாங்கள் திறப்போம் என்று ஈரான் கூறியிருந்தது. இதன் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு குறைய வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், பெட்ரோல், டீசல் காலியாகிவிடும் என்கிற வதந்தி காரணமாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் பங்க் முன்பு வரிசை கட்டி நின்றிருக்கின்றன.
அசாம் தலைநகர் குவஹாதி உட்பட, பகுதிகளில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் பதுக்கல் அதிகரித்தன. சமூக ஊடகங்களில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகள் பரவியதே இதற்கு காரணம். ஆனால், மாநிலத்தில் எவ்வித விநியோகக் குறைபாடும் இல்லை என அரசு தொடர்ந்து உறுதியளித்தது.

திடீரென கிளம்பிய பீதி
தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தால், வாகன ஓட்டிகள் தங்களது டேங்குகளை நிரப்ப பெட்ரோல் பம்புகள் முன் நீண்ட வரிசைகளில் நின்றனர். பீதியால் அதிக அளவில் பெட்ரோல் கொள்முதல் செய்யப்பட்டதால், குவஹாதி, கோலாகாட், நாகான், தாரங் போன்ற மாவட்டங்களில் பல பம்புகள் 'எரிபொருள் இல்லை' என்ற அறிவிப்புடன் மூடப்பட்டன.
மாநிலத் தலைமைச் செயலாளர் ரவி கோட்டா, எரிபொருள் தட்டுப்பாடு என்கிற பீதியை மறுத்தா். மாநிலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனவும், தீங்கிழைக்கும் சக்திகளே பீதியைத் தூண்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அதிகாரிகள் விளக்கம்
"ஐஓசிஎல் (IOCL), பிபிசிஎல் (BPCL), ஹெச்பிசிஎல் (HPCL) உட்பட அனைத்து சப்ளையர்களுடனும் சரிபார்த்துள்ளோம், இருப்பு போதுமானதாக உள்ளது," என கோட்டா தெரிவித்தார். தேசிய அளவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை எனப் பெட்ரோலியச் செயலர் முன்னரே தெரிவித்ததையும் அவர் மேற்கோள் காட்டினார். குவஹாதியில் உள்ள 35 பெட்ரோல் பம்புகளிலும் போதுமான இருப்பு இருப்பதை நிர்வாகம் உறுதிசெய்தது.
சில்லறை விற்பனை
அசாம் முழுவதும் உள்ள எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் (OMCகள்) கிடங்குகள் மற்றும் சில்லறைப் பம்புகளில் போதுமான இருப்பு உள்ளதாக, கோட்டா எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தினார். மேலும், ஐஓசிஎல் நிறுவனம் சில்லறை விற்பனையாளர்களுக்கான கட்டண விதிமுறைகளை தளர்த்தி, வாங்கிய மூன்று நாட்களுக்குள் பணம் செலுத்த அனுமதிக்கிறது.
இருப்பு குறித்து மக்களுக்கு உறுதியளித்த அவர், சில்லறை விற்பனை நிலையங்களில் தங்களது வழக்கமான தேவைகளுக்கு ஏற்ப எரிபொருளை வாங்குமாறு கேட்டுக்கொண்டார். காம்ரூப் (பெருநகர) மாவட்ட ஆணையர் ஸ்வப்னில் பாலும் மாநிலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
விற்பனைக்கு வரம்பு நிர்ணயிப்பு
பெட்ரோலிய டீலர்கள் சங்க வட்டாரம், விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை என்பதை ஒப்புக்கொண்டது. இருப்பினும், பீதி கொள்முதல் காரணமாகப் பம்புகளில் இருப்பு விரைவாகக் குறைந்தது. இதனால், சில முகவரகங்கள் ஒரு நபருக்கான விற்பனை அளவை வரம்பு செய்ய நேர்ந்தது.
நேற்று குஜராத் இன்று அசாம்
தற்போது இந்தயாவுக்காக ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டிருக்கிறது. எனவே அடுத்து வரும் நாட்களில் எரிபொருள் விநியோகம் சீராகும். இப்படி இருப்பினும், அவசர அவசரமாக எரிபொருளை மக்கள் நிரப்பி செல்கின்றனர். நேற்று முன்தினம் குஜராத்தில் இப்படித்தான் மக்கள் அதிக அளவில் பங்குகள் முன்பு குவிந்திருந்தனர். குக்கர் பாத்திரத்தில் கூட பெட்ரோலை வாங்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்திலும் பஞ்சாயத்து
மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்த மக்கள் இடையே திடீரென வன்முறை வெடித்தது. யார் முதலில் பெட்ரோல் நிரப்புவது என்பது குறித்த வாக்குவாதம், கோபம் அதிகரித்த நிலையில், அடிதடியாக மாறியது.
சில நிமிடங்களிலேயே சூழ்நிலை பதட்டமடைந்து, பெரும் மோதலாக மாறியதாகவும், இது பெட்ரோல் பங்கில் பீதியை கிளப்பியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர். பலர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் அடங்கிய ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் சித்தார்த் நகர் பகுதியில் நடந்ததாகக் கூறப்படுகிறது. எரிபொருள் விநியோகக் குறைபாடு பற்றிய கவலைகள் காரணமாக, பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசைகள் காணப்பட்ட அமையத்தில் இச்சண்டை நிகழ்ந்தது.
"முதலில் வருபவருக்கு முன்னுரிமை" என்ற விதிமுறை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், அடுத்த சில நிமிடங்களில் கைகலப்பாக மாறியதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு.. எந்த நாட்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் .. முழு விவரம் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications