Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகிழ்ச்சி! "ஆக்கப்பூர்வமாக இருந்தது.." அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த பின் பிரதமர் மோடி ட்வீட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி: ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு ட்வீட் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக பதிவிட்டுள்ளார்.

இந்தியா அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஜி 20 மாநாட்டில் அங்கம் வகிக்கின்றன. இந்த ஆண்டு ஜி 20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகிக்கிறது.

G 20 summit Happy to have welcomed US President Joe Biden

அதன்படி தலைநகர் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் மாநாட்டுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் ஒன்றாக அணி திரண்டு பங்கேற்க உள்ளனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலியா பிரதமர், சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் என ஏராளமான தலைவர்கள் டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

டெல்லிக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் தங்குவதற்காக டெல்லியில் உள்ள முக்கியமான நட்சத்திர விடுதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தற்போதே உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் தலைவர்கள் தங்கும் நட்சத்திர ஓட்டல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஜி 20 மாநாடு நாளை தொடங்க உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று மாலை 6. 55 மணி அளவில் டெல்லி வந்தடைந்தார்.

ஏர்போர்ஸ் ஒன் என்ற தனி விமானம் மூலம் வந்த ஜோ பைடன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இரு நாட்டு தலைவர்களும் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை பலப்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த பிறகு பிரதமர் மோடி பதிவிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:- லோக்சவன் கல்யாண் மார்க்கிற்கு அமெரிக்கா அதிபரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம். இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்பு உலக நாடுகளின் நன்மைக்கு தொடர்ந்து பங்கு அளிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி ட்வீட் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+