டெல்லி ஜி20 மாநாடு: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் செய்த 'காரியம்'.. போட்டோ பார்த்து கொண்டாடும் உலகம்!
டெல்லி: டெல்லி ஜி 20 உச்சி மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் மிக இயல்பாக, பவ்யமாக அமர்ந்து பேசும் படம் உலகம் முழுவதும் பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். டெல்லியில் கால் வைத்த போதே பிரதமர் நரேந்திர மோடி 'நமஸ்காரம்' சொன்னார். பின்னர் கிழக்கு டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவிலுக்கு மனைவியுடன் சென்று வழிபாடு நடத்தினார். அப்போது தம்மை பெருமைமிகு இந்து என அறிவித்துக் கொண்டார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்.

பின்னர் ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ரிஷி சுனக் மேற்கொண்டார். இந்த பேச்சுவார்த்தைகளில் வங்கதேச பிரதமர் ஷே ஹசீனாவுடன் ரிஷி சுனக் அமர்ந்து பேசும் படம்தான் இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
தாம் சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தின் பிரதமர் என்ற ஈகோ எதுவும் இல்லாமல் பெரியவரான ஷேக் ஹசீனா அமர்ந்திருந்த நாற்காலி அருகே தரையில் ஒரு காலில் மண்டியிட்டபடியே அன்யோன்யமாக ரிஷி சுனக் பேசும் அந்த காட்சிகள் அத்தனை பெருமிதத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது. தாம் ஒரு பிரம்மாண்ட ஏகாதிபத்திய அரசின் பிரதமர் பதவி என்ற சிந்தனை துளியும் இல்லாமல் ரிஷி சுனக் தம்மை வெளிப்படுத்திக் கொண்டதைத்தான் இன்று உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications