அதிர்ச்சியாக இருக்கிறது.. மிகவும் கவலை அளிக்கிறது.. இந்தியாவின் ஜிடிபியால் மன்மோகன் சிங் ஷாக்!
இந்தியாவின் பொருளாதார நிலை கவலை அளிக்கிறது, 4.5% ஜிடிபி என்பதை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது என்று பொருளாதார வல்லுனரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவின் பொருளாதார நிலை கவலை அளிக்கிறது, 4.5% ஜிடிபி என்பதை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது என்று பொருளாதார வல்லுனரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஒரு வருடமாக மோசமான பொருளாதார சூழ்நிலை நிலவி வருகிறது. பல்வேறு துறைகள் பெரிய அளவில் சரிவை சந்தித்து வருகிறது. இந்த பொருளாதார சரிவு காரணமாக மக்கள் நேரடியாக பாதிக்க தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஆகும் இது.

ஜிடிபி மோசம்
இந்தியாவின் இந்த ஜிடிபி குறித்து பொருளாதார வல்லுனரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவின் ஜிடிபி 4.5% தான் என்பது பெரிய அதிர்ச்சி தருகிறது: கொஞ்சம் கூட ஏற்க முடியாது. நாம் எல்லாம் இந்தியாவின் ஜிடிபி 8-9% இருக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும். அதற்கு ஏற்ற திட்டங்கள் போட வேண்டாம்.

பெரிய அதிர்ச்சி
முதல் காலாண்டில் 5% என்ற ஜிடிபியே அதிர்ச்சி அளித்தது. அதன்பின் இன்னும் ஜிடிபி குறைந்துள்ளது. இரண்டாவது காலாண்டில் ஜிடிபி மிக மோசமான நிலையான 4.5% என்ற நிலையை அடைந்துள்ளது. எனக்கு கவலை அளிக்கும் விஷயம் இந்த சரிவுதான்.

நடவடிக்கை இல்லை
போதுமான சீர் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. சிறு சிறு திருத்தங்கள், திட்டங்கள் எல்லாம் நமக்கு உதவாது. சரியான பொருளாதார திட்டங்களை வகுத்து, அதிரடியாக செயல்படுத்தினால் மட்டுமே இதில் இருந்து தப்பிக்க முடியும்.

சமுதாயம் எப்படி
அதே சமயம் சமுதாய பிரச்சனையும் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. சமுதாய பிரச்சனைதான் இந்த பொருளாதார நிலையை பிரதிபலிக்கிறது. சமுதாயத்தில் வெறுப்புணர்வு அதிகம் ஆகியுள்ளது. பொருளாதாரத்தை விட சமுதாய பிரச்சனை அதிக கவலை அளிக்கிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications