இந்திய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு... யார் இவர்... முழுவிபரம்
டெல்லி: இந்திய ராணுவத்தின் 29வது தளபதியாக மனோஜ் பாண்டே இன்று பொறுப்பேற்று கொண்டார். எம்எம் நரவனே ஓய்வு பெற்ற நிலையில் அவர் மனோஜ் பாண்டேவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இந்தியாவின் 28 வது ராணுவ தளபதியாக ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே உள்ளார். இந்த பொறுப்பில் இவர் கடந்த 28 மாதங்களாக திறமையாக செயல்பட்டு வந்தார்.
இவரது பதவிக்காலம் இன்றுடன் முடிடைகிறது. இவர் ஓய்வு பெறுவதையொட்டி புதிய ராணுவ தளபதி தேர்வு சமீபத்தில் நடந்தது.

புதிய தளபதி பொறுப்பேற்பு
அதன்படி இந்திய ராணுவத்தின் துணை தளபதியான ஜெனரல் மனோஜ் பாண்டே தேர்வானார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 18 ல் அறிவிக்கப்பட்டது. எம்எம் நரவனே இன்று ஓய்வு பெறுவதால் புதிய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்று கொண்டார். எம்எம் நரவனே அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

யார் இந்த மனோஜ் பாண்டே
மனோஜ் பாண்டே 1962 மே 6ம் தேதி பிறந்தார். 1982ல் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி முடித்தார். ராணுவத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றி இந்த உயர் பதவியை அடைந்துள்ளார். இதன்மூலம் ராணுவத்தில் பொறியியல் பிரிவில் இருந்து ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மனோஜ் பாண்டே இந்திய ராணுவ பிரிவு, லடாக், பாகிஸ்தான் எல்லை, அந்தமான்-நிகோபார் பிராந்திய தளபதியாகவும் பணி செய்துள்ளார். மேலும் பிப்ரவரி மாதம் தான் ராணுவ துணை தளபதியாக பொறுப்பேற்றார். அடுத்த 2 மாதத்தில் இந்திய ராணுவத்தின் 29வது தளபதியாக பொறுப்பேற்று உள்ளார். இவர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பொறுப்பில் செயல்பட வாய்ப்புள்ளது. இவருக்கு பதில் ராணுவ துணை தளபதியாக பிஎஸ் ராஜூ நியமிக்கப்பட்டுள்ளாா்.

சவால்கள் என்னென்ன
ராணுவ தளபதியான மனோஜ் பாண்டே முன்பு பல்வேறு சவால்கள் உள்ளன. இந்திய -சீன எல்லை, இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இந்திய ராணுவம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் இதை கட்டுப்படுத்த வேண்டும். அதேசமயத்தில் எதிர் நாட்டினருக்கும் உரிய நேரத்தில் பதிலடி கொடுக்க வேண்டும். மேலும் முப்படைகளுக்கான அரசின் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் கடற்படை, விமானப்படை ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

எதிர்கால முயற்சிக்கு வாழ்த்து
இதற்கிடையே எம்எம் நரவனே பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், " 42 ஆண்டுகள் நாட்டுக்காக சேவையாற்றி இன்று ஓய்வுபெறும் ராணுவ தளபதி எம்எம் நரவனே உடனான அற்புதமான சந்திப்பு. ராணுவத் தலைவராக அவர் ஆற்றிய பங்களிப்புகள் நாட்டின் பாதுகாப்புத் திறன்களையும் தயார்நிலையையும் வலுப்படுத்தியுள்ளது. அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

குடியரசு தலைவருடன் சந்திப்பு
இதையடுத்து, ஓய்வுப் பெற்ற ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே மற்றும் அவரது மனைவி வீணா நரவனே ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோரை ராஷ்டிரபதி பவனில் சந்தித்து பேசினர். பிறகு சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

முப்படைகளின் தலைமை தளபதி வாய்ப்பு?
தற்போது தனது பதவியில் இருந்து ஓய்வு பெரும் நரவனேவை மத்திய அரசு முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் இருந்து நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அதிகாரிகள் என 14 பேருடன் ராணுவ ஹெலிகாப்டரில் சென்றார். இது விபத்துக்குள்ளான நிலையில் அனைவரும் பலியாகினர். முப்படைகளின் முதல் தலைமை தளபதியான பிபின் ராவத் இறந்த நிலையில் அந்த பதவி காலியாக உள்ளது. இந்நிலையில் தான் இந்த பதவியில் ஓய்வு பெறும் ராணுவ தளபதி நரவானே நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications