Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானுக்கு நோ சொல்லி.. இந்தியாவுடன் கைகோர்த்த ஜெர்மனி! இனி நாமதான் கெத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பில் இந்தியாவுக்கு புதிய டெக்னாலஜியை கொடுக்க ஜெர்மனி முன்வந்திருக்கிறது. இதற்கு முன்னர் பாகிஸ்தான் இந்த டெக்னாலஜியை கேட்டிருந்தது. ஆனால் ஜெர்மனி அந்நாட்டுக்கு கொடுக்கவில்லை. அந்த வகையில் இந்தியாவுக்கு தற்போது சிறப்பான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் 'Agosta-class PNS Saad' எனும் நீர் மூழ்கி கப்பல் காணாமல் போய்விட்டது. வழக்கமாக நீர் மூழ்கி கப்பல்கள் 48 மணி நேரம் வரை நீருக்குள் இருக்கும். பின்னர் ஆக்ஸிஜன் தீர்ந்துபோய், மேலே வந்துவிடும். ஆனால் பாகிஸ்தானின் கப்பல் காணாமல் போய் 48 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆகிவிட்டது. இருந்தாலும் நீர்நிலையில் மேற்பகுதியில் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. இது இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தல்.

germany submarine international

பாகிஸ்தான் எல்லையிலிருந்து குஜராத்துக்கு இந்த கப்பல் 3 நாட்களில் வந்துவிடும். அதேபோல மும்பையை ஒட்டிய கடற்பகுதிக்கு வெறும் 6 நாட்களில் வந்துவிடும். எனவே, நீர்மூழ்கி கப்பலை இந்தியா வலை வீசி தேடியது. இதற்காக சிறப்பு ரோந்து கப்பல்கள், மற்றும் விமானங்களையும் இந்தியா அனுப்பியிருந்தது. 21 நாட்கள் நீண்ட தேடுதலுக்கு பின்னர் மேற்கு பாகிஸ்தானில் உள்ள கடல் பரப்பில் அந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.

21 நாட்கள் கப்பல் நீருக்குள் இருந்தது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழலாம். கடற்படையும் இது குறித்து விசாரித்ததில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதாவது, காணமல் போன பாகிஸ்தான் நீர்மூழ்கி கப்பல் 'Agosta-class' வகையை சேர்ந்தது. இந்த வகை கப்பல்களை பிரான்ஸ் ராணுவம் கடந்த 1970களில் தயாரித்தது. இதன் சிறப்பம்சமே நீண்ட நாட்கள் கடலுக்குள் இருப்பதுதான். காரணம் இதில் air-independent propulsion (AIP) எனப்படும் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருக்கிறது.

அதாவது கப்பல் மேலே வரவில்லை என்றாலும் கூட, இது தானாக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து உள்ளே இருக்கும் கடற்படை வீரர்களை காப்பாற்றும். 2-3 வாரங்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை இந்த தொழில்நுட்பத்தால் வழங்க முடியும்.

ஆனால் பாகிஸ்தான் சொந்தமாக இந்த தொழில்நுட்பம் கொண்ட நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க முடியாது. எப்படி தயாரிப்பது என்றும் தெரியாது. எனவே கடந்த 2020ம் ஆண்டு ஜெர்மனியிடம் இந்த தொழில்நுட்பத்தில் இயக்கும் நவீன நீர்மூழ்கி கப்பலை தயாரித்து கொடுக்க கேட்டிருந்தது. "நீங்க ஏற்கெனவே சீனாவுடன் இருக்கீங்க.. அதனால இதை தர முடியாது" என ஜெர்மனி கைவிரித்துவிட்டது.

இப்படி கைவிரித்த ஜெர்மனி, தற்போது இந்தியாவுக்கு இந்த அதிநவீன கப்பல்களை செய்து தர முன்வந்திருக்கிறது. அதாவது ஜெர்மனி கடற்படைக்கு தேவையான கப்பல்களை தயாரித்து கொடுக்கும் 'Thyssenkrupp Marine Systems (TKMS)' எனும் தனியார் நிறுவனம், இந்தியாவின் கப்பல் கட்டுமான பொதுத்துறை நிறுவமான 'மசாகன் கப்பல் கட்டும் நிறுவனத்துடன்' (Mazagon Dock Shipbuilders) ரூ.44,816 கோடிக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

இதன் மூலம் இந்தியாவுக்கு AIP வசதி கொண்ட அதிநவீன 6 கடற்படை நீர்மூழ்கி கப்பல்களை இந்நிறுவனம் தயாரித்து கொடுக்கும். கடந்த 44 ஆண்டுகளில் இந்தியா-ஜெர்மனி ஒன்று சேர்ந்து கப்பல்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது இதுவே முதல்முறையாகும்.

இப்படி தயாரிக்கப்படும் கப்பல்களில் லித்தியம்-ஐயன் பேட்டரிகள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது பாகிஸ்தானிடம் உள்ள கப்பல்களில் டீசல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டீசலுடன், லித்தியம் பேட்டரிகளை ஒப்பிடும்போது பேட்டரிகளே அதிகவேக செயல் திறனை கொடுக்கும். எனவே இந்தியாவுக்கு கிடைக்கும் கப்பல்கள் அதிவேகம் கொண்டதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+