கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் நவம்பர் 1 முதல் தொடங்கும்.. மத்திய அரசு முக்கிய அட்டவணை
டெல்லி: நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்து கல்லூரிகள், பள்ளிகள் இயங்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளையும், கல்லூரிகளையும் நாடு முழுவதும் திறக்க அரசு அனுமதிக்கவில்லை.
அதேநேரம் ஆன்லைன் கல்விக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி கல்லூரிகளில் ஆன்லைன் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதேபோல் பள்ளிகளிலும் ஆன்லைன் வழியாக கல்வி கற்பிக்கப்படுகிறது.

நுழைவு தேர்வுகள்
இந்நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் வழியாக தற்போது கல்லூரிகள் நடைபெற்று வருகிறது. கல்லூரிகளில் தற்போது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. மருத்துவ படிப்புக்கு அண்மையில் நீட் நுழைவு தேர்வு நடந்து முடிந்தது.இதேபோல் ஐஐடி உள்ளிட்ட பல்கலைக்கழங்களில் படிக்கவும் நுழைவு தேர்வு நடந்து முடிந்துள்ளது.

அட்டவனை வெளியீடு
இந்த சூழலில் கலை அறிவியல் கல்லூரிகள் உள்பட அனைத்து விதமான கல்லூரிகளின் முதலாம் ஆண்டு வகுப்புகளை வரும் நவம்பர் 1ம் தேதி முதல் தொடங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கான வகுப்புகள் தொடங்குவதற்கான அட்டவணையை மத்திய கல்வி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அக்.31க்குள் மாணவர்சேர்க்கை
இதன்படி அக்டோபர் 31 க்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்ய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. வகுப்புகள் நவம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்குகிறது.
தேர்வுக்கு தயாராக விடுமுறைகாலம் 1.03.2021 முதல் 07.03. 2021 வரை இருக்கும்.
செமஸ்டர் தேர்வுகள் 8.03.2021 முதல் 26.03, 2021 வரை நடைபெறும்

விடுமுறை எப்போது
- செமஸ்டர் தேர்வுக்கு பின்பான விடுமுறை காலம் 27.03.2021 முதல் 04.04.2021.
- செமஸ்டர் தேர்வு விடுமுறைக்கு பின்பு வகுப்புகள் 05.04.2021 முதல் தொடங்கும்.
- தேர்வுக்கு தயாராக விடுமுறை காலம் 01.08.2021 முதல் 08.08.2021 வரை இருக்கும்.
- இரண்டாவது செமஸ்டர் தேர்வு 09.08.2021 முதல் 21.08,2021 வரை நடைபெறும்.
- 2வது செமஸ்டர் விடுமுறை 22.08,2021 முதல் 29.08,2021 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
- அடுத்த கல்வியாண்டில் கல்லூரி வகுப்புகள் 30.8.2021 முதல் தொடங்கும்" இவ்வாறு மத்திய அரசு அட்டவணை வெளியிட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications