தீவிரவாத எதிர்ப்பில் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு.. அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
டெல்லி:டெல்லியில் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில்... புல்வாமா தாக்குதலில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களில் 2 தமிழக வீரர்களும் அடங்குவர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தீவிரவாத ஒழிப்புக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என்று ராகுல் காந்தி அறிவித்திருக்கிறார்.
இந் நிலையில், காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விவாதிக்க ஏற்கனவே அறிவித்தபடி டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி உள்ளது. உள்துறை அமைச்சகம் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

நாடாளுமன்ற நூலக அரங்கில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூட்டம் தொடங்கி உள்ளது. குலாம் நபி ஆசாத்(காங்), ஆனந்த் சர்மா (காங்), சரத்பவார்(தேசியவாத காங்கிரஸ்),திமுக சார்பில் கனிமொழி மற்றும் எம்பி டி. ராஜா உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காஷ்மீர் தாக்குதல் குறித்தும் அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முழுமையாக விவாதிக்கப்படும். எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளையும் மத்திய அரசு பெற்றுக் கொண்டது.
புல்வாமா தாக்குதல் குறித்து அரசு மேற்கொண்டிருக்கிற நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் உறுதி அளித்துள்ளன.
-
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications