தீவிரவாத எதிர்ப்பில் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு.. அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
டெல்லி:டெல்லியில் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில்... புல்வாமா தாக்குதலில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களில் 2 தமிழக வீரர்களும் அடங்குவர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தீவிரவாத ஒழிப்புக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என்று ராகுல் காந்தி அறிவித்திருக்கிறார்.
இந் நிலையில், காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விவாதிக்க ஏற்கனவே அறிவித்தபடி டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி உள்ளது. உள்துறை அமைச்சகம் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

நாடாளுமன்ற நூலக அரங்கில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூட்டம் தொடங்கி உள்ளது. குலாம் நபி ஆசாத்(காங்), ஆனந்த் சர்மா (காங்), சரத்பவார்(தேசியவாத காங்கிரஸ்),திமுக சார்பில் கனிமொழி மற்றும் எம்பி டி. ராஜா உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காஷ்மீர் தாக்குதல் குறித்தும் அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முழுமையாக விவாதிக்கப்படும். எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளையும் மத்திய அரசு பெற்றுக் கொண்டது.
புல்வாமா தாக்குதல் குறித்து அரசு மேற்கொண்டிருக்கிற நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் உறுதி அளித்துள்ளன.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications