Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்.. விதிகளில் மிகப்பெரிய மாற்றம்.. சர்ச்சை மசோதா இன்று தாக்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் விதிகளில் மாற்றம் செய்யும் புதிய சட்ட மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய போகிறது. சர்ச்சைக்குரியதாக விமர்சிக்கப்படும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி இடம்பெற மாட்டார்.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல்ஆணையர்கள் மத்திய அமைச்சரவையின் பரிந்துரை அடிப்படையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவது இந்தியாவில் வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் என்பது மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 Government move amendment to bring Chief Election Commissioner, Election Commissions on par with SC judges

இந்த மனுக்களை 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இதன்படி, மத்திய அரசு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர்பாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும். அதுவரை, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி ஆகிய 3 பேர் அடங்கிய குழுதான் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில், 1) பிரதமர்2) எதிர்க்கட்சித் தலைவர் 3) இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் மட்டுமே இருக்க முடியும் என்கிற நிலை உள்ளது.

இந்த சூழலில்தான் இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான முக்கிய சட்டத்திருத்தத்தை இன்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. இதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் பதவிகளைத் தக்கவைக்க மசோதாவில் திருத்தம் கொண்டுவருகிறது.

புதிய சட்டத்திருத்தத்தின் படி, குழுவில் இருப்பவர்கள், 1) பிரதமர் 2) எதிர்க்கட்சித் தலைவர், மக்களவை3) பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட மத்திய அமைச்சரவை அமைச்சர் (தலைமை நீதிபதிக்கு பதிலாக) அதாவது மொத்தம் உள்ள மூன்று ஓட்டில் பிரதமர் மற்றும் பிரதமர் சார்பாக அமைச்சர் உள்ளதால், பிரதமரே அடுத்த தலைமை தேர்தல் ஆணையரை தீர்மானிக்கும் நிலை உருவாகும். இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால், தேர்தல் ஆணைய நியமனத்தில் நீதிமன்றங்களின் தலையீடுக்கு இதன் மூலம் கிட்டதட்ட முடிவுக்கு வரும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+