தடுப்பூசி போட மத்திய அரசு கேட்ட பட்டியல்.. தேர்தல் ஆணையம் சம்மதம்.. செம்ம திருப்பம்
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதல்கட்டமாக 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு போடப்பட உள்ளது. அவர்களை அடையாளம் காண்பதற்காக வாக்காளர் பட்டியலைப் பகிர்ந்து கொள்ளுமாறு உள்துறை அமைச்சகம் விடுத்த வேண்டுகோளை தேர்தல் ஆணையம் (இ.சி) ஏற்று கொண்டுள்ளது. இந்த தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போத தேர்தல் ஆணையம், உள்தறை அமைச்சகத்திற்குத் தேவையான குறிப்பிட்ட தரவுகளை பிரித்து தருவதற்கான பணிகளை செய்ய தொடங்கி உள்ளது.

மத்திய அரசின் திட்டப்படி, தடுப்பூசி முதலில் சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும், அதன்பிறகு 50 வயதிற்குட்பட்ட தொற்றா நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு வழங்கப்படும். தற்போது முதல்கட்டமாக 50 க்கு மேல் மற்றும் 60 க்கு மேல் உள்ளவர்கள் என பட்டியல் உருவாக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட உள்ளது.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறிய தகவலின் படி, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை அடையாளம் காண தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் தரவு கோரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அதன்படி வழங்க உள்ளது.
தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், " 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களின் சாவடி வாரியான தகவல்களை அந்தந்த மாநிலங்களுக்கு நாங்கள் வழங்குவது குறித்து பரிசீலிப்போம். எல்லா மாநிலங்களின் தகவல்களையும் ஒற்றை மத்திய அரசு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு பதிலாக அந்தந்த மாநிலங்களுக்கு வழங்குவோம் என்றார்
கடந்த மாதம் சுகாதார அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகள் இடையே நடந்த சந்திப்பிற்கு பின்னர் உள்துறை செயலாளர் அஜய் பல்லாவிற்கு, 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் விவரங்களை பகிர ஒப்புதல் தெரிவித்து தேர்தல் ஆணையம் பதிலை அனுப்பி உள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையை உறுதி செய்வதற்கும் அனைத்து மாநில அரசாங்கங்களுடனும் ஒருங்கிணைக்கும் நோடல் அமைப்பு என்றால் அது உள்துறை அமைச்சகம் தான். கடந்த மாதம், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தடுப்பூசி வழங்குவதற்கு உதவி கோரினால் நிச்சயம் தேர்தல் ஆணையம் உதவும் என்று கூறியிருந்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications