அன்லாக் 5.0 வழிகாட்டுதல்கள்.. இன்று வெளியிடும் மத்திய அரசு... எதிர்பார்ப்புகள் என்ன?
டெல்லி: அன்லாக் 5.0 வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிடுகிறது. அக்டோபர் 1 முதல் எதற்கெல்லாம் தடை, எதற்கெல்லாம் அனுமதி, என்பது குறித்து மத்திய அரசு அறிவிக்கப்போகிறது.
செப்டம்பர் 21 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை ஓரளவு திறக்க அன்லாக் 4.0 அனுமதித்திருந்தது. தளர்வு இருந்தபோதிலும், 8 மாநிலங்கள் மட்டுமே மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதித்தன.
பெற்றோரின் பயம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அவர்கள் தயங்குவது போன்ற காரணங்களால் பள்ளிகளை மீண்டும் திறக்கும் உத்தரவு 5.0 வழிகாட்டுதல்களில் இருக்க வாய்ப்பு இல்லை. இதேபோல் அன்லாக் 4ல் இருந்து பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
உள்துறை அமைச்சகம் வெளியிடும் 5.0 வழிகாட்டுதல்களில். பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்பட வாய்ப்பு இல்லை. எனினும் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ள திரையரங்குகள் அக்டோபர் முதல் திறக்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு... தினமும் விசாரித்ததால்... பணி நீட்டிப்பு பெற்ற நீதிபதி எஸ்.கே. யாதவ்!!
கல்லூரிகளைப் பொறுத்தவரை, அதிக தளர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. முதல் ஆண்டுக்கான இளங்கலை படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறை அக்டோபர் முதல் இந்தியா முழுவதும் தொடங்க உள்ளன.