மன்மோகன் சிங்கிற்கு அச்சுறுத்தல் இல்லை.. சிறப்பு பாதுகாப்பை ரத்து செய்தது மோடி அரசு
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு திருப்பி பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1985-ஆம் ஆண்டு இந்திய பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) அமைக்கப்பட்டது. சிஆர்பிஎஃப், ஐடிபிபி மற்றும் சிஐஎஸ்எஃப் ஆகிய துணை ராணுவப் படைகளிலிருந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பாதுகாப்பு படையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதுவரை இந்தியாவில் தற்போது சிறப்பு பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் பொறுப்பேற்றவுடன் எஸ்பிஜி மூலம் பாதுகாப்பு அளிக்கப்படுவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் மத்திய உள்துறை அமைச்சகம், கேபினெட் அமைச்சகம், உளவுத் துறை ஆகியவை ஈடுபட்டது. 3 மாதங்கள் நடைபெற்ற இந்த ஆய்வின் இறுதியில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு படையினரை விலக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இவர்களுக்கு பதில் சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிகிறது. மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை ஆய்வு செய்த பின்னர் எஸ்பிஜி விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வராதநிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications