அடுத்த மாதம் 'விஸ்வகர்மா யோஜனா திட்டம்' செயல்படுத்தப்படும்.. சுதந்திர தின உரையில் மோடி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அடுத்த மாதம் விஸ்வகர்மா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நாட்டின் 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி வருகிறார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார். குறிப்பாக நாட்டில் அடுத்த மாதம் முதல் விஸ்வகர்மா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

அதாவது, பாரம்பரிய திறமைகள் கொண்ட நபர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விஸ்வகர்மா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். 15 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த விஸ்வகர்மா யோஜனா திட்டம் அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications