அப்பளம், வெல்லம், சாக்லேட்.. 143 பொருட்களின் ஜி.எஸ்.டி.வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு?
டெல்லி: அப்பளம், வெல்லம், சாக்லேட் உள்ளிட்ட 143 பொருட்களின் ஜி.எஸ்.டி.வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக மாநில அரசுகளிடம் கருத்து கேட்டு வருகிறதாம் ஜிஎஸ்டி கவுன்சில்.
சாக்லேட், அப்பளம் உள்ளிட்ட 143 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைப்பது என்பது 2017, 2018 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவு. 2017-ம் ஆண்டு அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில், வாசனை திரவியங்கள், தோல் ஆடைகள், அணிகலன்கள், சாக்லேட்டுகள், பட்டாசுகள், ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டது. தற்போது இவற்றின் விலை உயர்த்தப்பட உள்ளது.

2018-ம் ஆண்டு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலர் டிவி செட், மானிட்டர்கள், டிஜிட்டல், வீடியோ கேமரா ரெக்கார்டர்கள், பவர் பேங்க்குகள் ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டன. தற்போது இவற்றின் விலையும் உயர்த்தப்பட உள்ளது.
2017,2018-ல் விலை குறைக்கப்பட்ட 92% பொருட்கள் 18% வரி விகித கட்டமைப்பில் இருந்து 25% வரி விகித கட்டமைப்புக்கு மாற்றப்பட இருக்கிறது. பூஜ்ஜியம் வரி விதிப்பு பட்டியலில் உள்ள அப்பளம் உள்ளிட்டவை 5% வரி விகித கட்டமைப்புக்கு மாற்றப்படுகிறது. 5% வரி விகித கட்டமைப்பில் இருப்பவரை 12%-க்கு உயர்த்தப்படவும் இருக்கிறது. தற்போது இந்த வரிவிகித மாற்றம் தொடர்பாக மாநில அரசுகளிடம் கருத்து கேட்டு வருகிறது ஜிஎஸ்டி கவுன்சில்.
இதனால் அப்பளம், வெல்லம், சாக்லேட் உள்ளிட்ட 143 பொருட்களின் விலைகள் கடுமையாக உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications