இரண்டு அடுக்காக குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி! என்ன மாற்றம்? நிர்மலா சீதாராமன் அறிவித்தது இதுதான்!
டெல்லி: ஜிஎஸ்டியை முறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்திருக்கும் நிலையில் இன்று அது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இனி ஜிஎஸ்டி இரண்டடுக்காக மட்டுமே தொடரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.
டெல்லியில் இன்று நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், ஜஎஸ்டி வரியை எளிமைப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியார்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், இனி இரண்டடுக்கு ஜஎஸ்டி வரி மட்டுமே நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அதாவது ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது அது 4 அடுக்ககளாக இருந்தது. 5, 12, 18 மற்றும் 28 என வரி இருந்தது. இனி இது 5 மற்றும் 18 என இரண்டு அடுக்காக மட்டுமே இருக்கும் என நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு செப்.22 முதல் அமலுக்கு வரும் எனவும் கூறியுள்ளார்.
இந்த மாற்றத்தை வரவேற்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, "சுதந்திர தின உரையின் போது, அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான எங்கள் நோக்கம் குறித்து நான் பேசியிருந்தேன். சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதையும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பரந்த அளவிலான ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கான விரிவான திட்டத்தை மத்திய அரசு தயாரித்திருந்தது.
மத்திய அரசு மற்றும் மாநிலங்களை உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சில் சாமானியர்கள், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசு சமர்ப்பித்த திட்டங்களுக்கு கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
புதிய அறிவிப்பின்படி, 12 சதவிகிதத்தில் இருந்த பொருட்கள் 5 சதவிகிதத்திற்கும், 28 சதவிகிதத்திலிருந்த பொருட்கள் 18 சதவிகிதத்திற்கும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதனால். சமானிய மக்கள் பெரிய அளவில் பலன் பெறுவார்கள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த புதிய மாற்றத்தின்படி கல்வி பொருட்களுக்கான ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, காப்பீடுக்கான ஜிஎஸ்டியும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications