Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாலம் விபத்துக்கள்.. குஜராத்துக்கு அவார்டே கொடுக்கலாம் போல! கடந்த 10 ஆண்டுகளில் இத்தனை பலியா!

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த பாலம் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இம்மாநிலத்தில் ஏராளமான பாலங்களில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. தொடர் பாலம் விபத்துகள், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

நேற்று காலை குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்திருக்கிறது. இந்த விபத்தில், 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

Vadodara bridge Gujarat

குஜராத்தில் பாலம் விபத்துக்கள் நடப்பது இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னர் ஏராளமான பாலங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. எனவே, பாலத்தின் தரம், பாலம் கட்டுமானம் குறித்து மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக குஜராத்தில் நடந்த பல விபத்துக்கள் பின்வருமாறு.

சூரத் கேபிள் பாலம் விபத்து

கடந்த 2014ம் ஆண்டு, அத்வாலைன்ஸ் பகுதியிலிருந்து தபி ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலத்தின் அணுகுசாலை கட்டுமானத்தின்போது விபத்து ஏற்பட்டது. ஜூன்.10ம் தேதி இந்த விபத்து நடந்தது. இது கட்டி முடிக்கப்படவில்லை. முன்னதாகவே விழுந்து விபத்தில் சிக்கியது. கட்டுமானப் பணியின் போது, 35 மீட்டர் நீளமுள்ள ஒரு கான்கிரீட் ஸ்லாப், சுமார் 40 அடி உயரத்தில் இருந்து திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

ஜூனாகத் பாலம் விபத்து

இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் மக்கள் படுகாயமடைந்தனர். இந்த பாலம், ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள மலாங்கா கிராமத்தை மென்டார்டா-சாசன் சாலையுடன் இணைக்கிறது. கனமழை காணரமாக இந்த பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தின் நடுப்பகுதி சிதைந்து ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பல வாகனங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதமடைந்தன. இந்த விபத்தில் மொத்தம் 12 பேர் காயமடைந்தனர்.

அகமதாபாத் ஹட்கேஷ்வர் பாலம்

இந்த பாலம் இடிந்து விழவில்லை. மாறாக விரிசல் காரணமாக முன்கூட்டியே உஷார் செய்யப்பட்டு, போக்குவரத்து நிறத்தப்பட்டது. 2015ல் இந்த பாலம் கட்ட தொடங்கப்பட்டது. 2017ல் ரூ.40 கோடி செலவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. பாலம் அடுத்த 100 ஆண்டுகளுக்கு தாங்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், அடுத்த 4 ஆண்டுகளில், அதாவது 2021ல் பாலம் விரிசல் விட தொடங்கியது.

Vadodara bridge Gujarat

அகமதாபாத் மும்டாபுரா மேம்பாலம் விபத்து

அகமதாபாத்தில் உள்ள SP ரிங் ரோட்டில் தெற்கு போபால் அருகே உள்ள மும்டாபுரா பகுதியில் இந்த பாலம் கடந்த 2021ம் ஆண்டு கட்டப்பட்டுக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. பாலம் ஓரிரு வாரங்களில் திறக்கபபட் இருந்த நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால், சில தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

மோர்பி பாலம் விபத்து 2022

இந்த விபத்துதான் குஜராத் வரலாற்றிலேயே மிக மோசமான விபத்தாக பார்க்கப்படுகிறது. 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி இந்த விபத்து நடந்தது. மோர்பி நகரில் உள்ள மச்சு நதியின் மீது கட்டப்பட்டிருந்த தொங்கு நடை மேம்பாலம் அறுந்த ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் மொத்தம் 141 பேர் பலியாகினர். 100 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்ட வெறும் 4 நாட்களில் அறுந்து விழுந்தது.

இதனை தொடர்ந்து, 2023ல் மிந்தோலா ஆறு பாலத்தில் ஏற்பட்ட விரிசல் அதனை தொடர்ந்து நேற்று வதோதராவில் நடந்த விபத்து ஆகியவை கட்டுமானங்கள் தொடர்பான கேள்வியை எழுப்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+