நாடு முழுக்க எழுந்த ஆக்ரோஷம்.. ஹத்ராஸ் மாவட்ட போலீஸ் எஸ்.பி. உட்பட 5 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
டெல்லி: இளம் பெண் கொலை மற்றும் அதைச் சார்ந்த தில்லுமுல்லு குற்றச்சாட்டுகளால், உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட ஐந்து போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
உயர் சாதியை சேர்ந்த ஒரு கும்பலால், உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண் கடந்த மாதம் 14ம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டார். கடும் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்ற அவர் கடந்த செவ்வாய்க்கிழமை பலியானார். ஆனால் அவர் உடலை குடும்பத்தாரிடம் கொடுக்காமல் போலீசார் தகனம் செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுக்க போராட்டங்கள் வலுப்பெற்றன.

பல கட்சிகளும், மனித ஆர்வலர்களும், மகளிர் அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த சம்பவத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு உ.பி. அரசால், அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் ஆரம்பகட்ட விசாரணையின்படி, போலீஸ் தரப்பில் தவறுகள் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில்தான், போலீஸ் எஸ்பி உட்பட 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரையும் உண்மை கண்டறிதல் சோதனைக்கு உட்படுத்த சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில்தான், காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications