எலும்புக்கூடா சிதைஞ்சு போச்சே.. வெந்துபோன உடல்கள்.. கருகிய பெட்டிகள்.. இந்தியாவின் இதயமே நடுநடுங்குதே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒடிஷாவில் நடந்த ரயில் விபத்தின் அதிர்ச்சியில் இருந்து, இன்னும் நாட்டு மக்கள் மீளவில்லை.. இதனிடையே, விபத்து பகுதியின் காட்சிகளை இணையத்தில் பார்த்து, வெலவெலத்து போயுள்ளனர்.

இந்தியாவில் நடந்த ரயில் விபத்துக்களில் மிகப்பெரிய ரயில் விபத்தாக இது கருதப்படுகிறது.. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் 1200 பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த 12000 வீரர்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்..

Heartbreaking scenes and odisha train accident shocking photos, videos

மீட்பு பணிகள்: இப்போதைக்கு மீட்பு பணிகள் முடிந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் சொல்கிறது.. ஆனாலும், ஒவ்வொரு பகுதியிலும் மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்..

அந்த ஒவ்வொரு இடங்களிலும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே அடுத்த இடங்களில் பணியை துவங்குகிறார்கள்.. எப்படியும் இந்த பணிகளை முடிக்க இன்னும் 4 மணி நேரங்கள் ஆகும் என்கிறார்கள்.. அந்தவகையில், இன்று மாலை மீட்பு பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Heartbreaking scenes and odisha train accident shocking photos, videos

இதனிடையே, விபத்து நடந்த பகுதிகளின் வீடியோக்களும், போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி பதற செய்து வருகின்றன.. அந்த பகுதியை பார்க்கும்போது, மொத்தமாகவே தரையிறங்கி இருப்பது போல தென்படுகிறது.. 3 ரயில்களும் ஒன்றோடொன்று உரசிக்கொண்டும், இடித்துக் கொண்டும் கிடக்கின்றன.. ரயில் பெட்டிகள் அந்தரத்தில் தொங்கி கிடக்கின்றன.. மேலும் சில ரயில் பெட்டிகள், தலைகீழாக திரும்பி தொங்கி கொண்டிருக்கின்றன.

சின்னாபின்னம்: உயிரிழந்தவர்களின் சடலங்கள் வெள்ளை துணியால் போர்த்தப்பட்டு, வரிசையாக படுக்க வைக்கப்பட்டிருக்கின்றன.. கடும்புயல் நேரத்தில் பாதிக்கப்பட்டிருப்பதை போல, ரயில்வே தண்டவாளங்கள் சின்னாபின்னமாகி கிடக்கின்றன.. சில ரயில் பெட்டிகள் அடையாளம் தெரியாத அளவுக்கு எலும்புக்கூடாய் கருகி காட்சி அளிக்கிறது.. சில ரயில் பெட்டிகள் இரும்பு கூழாக உறைந்து காட்சியளிக்கின்றன.

Heartbreaking scenes and odisha train accident shocking photos, videos

சூறாவளியால் சூறையாடப்பட்டதைப்போல ரயில் பெட்டிகள் தூக்கி ஆங்காங்கே வீசப்பட்டுள்ளதை அந்த காட்சிகளில் பார்க்க முடிகிறது.. மீட்பு பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், எரிவாயு மூலம் வெட்டும் கருவிகளைக் கொண்டு, நசுங்கிய ரயில் பெட்டிகளை அறுக்கிறார்கள்.. சிலர் உடைத்தெறிகிறார்கள்.. அதற்கு பிறகு, உள்ளே நுழைந்து, யாராவது சிக்கியிருக்கிறார்களா என்பதை தேடி வருவதை காண முடிகிறது..

பதற்றம்: விபத்து பகுதி முழுவதுமே, மீட்பு படையினர் பதற்றத்துடன் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.. மற்றொரு பக்கம் ஆம்புலன்ஸ்களின் சப்தம் அந்த பகுதியில் உலுக்கி எடுக்கிறது.. ரயில்பெட்டிகளை அறுக்கும் சப்தமும், ஆம்புலன்ஸ்களின் சைலன் ஒலியும், போலீசின் விசில் சப்தமும், மாறி மாறி எதிரொலித்து கொண்டேயிருக்கிறது..இதில் எந்த சத்தத்தை கேட்டாலும், நெஞ்சத்தை துளைத்து செல்வது போலவே உணர முடிகிறது.

Heartbreaking scenes and odisha train accident shocking photos, videos

ரயில்வே தண்டவாளங்களில் சிதறியும், சிந்தியும், உறைந்தும் கிடக்கும் மனித ரத்தங்கள், காண்போரின் இதயத்தை கலங்கடிக்க வைத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+