நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக.. தமிழில் அதிக உரைகள் நிகழ்த்தி சாதனை!
டெல்லி: நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக, நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில், தமிழில் 50 உரைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. வேறு எந்த மொழியை விட தமிழில்தான் அதிக அளவில் உரைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற மக்களவையில் மொத்தம் 160 உரைகள், சொந்த மொழியில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதில் தமிழில் மட்டும் 50 உரைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

யார் யார் தமிழில் பேசினார்கள்?
நாடாளுமன்றத்தை பொறுத்தவரை, சில எம்பிக்கள் தொடர்ந்து தமிழில்தான் பேசுவார்கள். சு.வெங்கடேசன், திருமாவளவன், பிரகாஷ், ஈஸ்வரசாமி, செல்வராஜ், தங்கத்தமிழ்ச்செல்வன், துரை வைகோ, சுப்பராயன், நவாஸ் கனி, வைத்திலிங்கம் இவர்கள் வழக்கமாக தமிழில்தான் பேசுவார்கள். அந்த வகையில் இந்த முறையும் தமிழில்தான் பேசினார்கள். அதேபோல கனிமொழி, தயாநிதி, பாலு உள்ளிட்ட சில எம்பிக்கள், வழக்கமாக ஆங்கிலத்தில் பேசுவார்கள். ஆனால், இவர்கள் இந்த முறை தமிழில்தான் பேசினார்கள்.
இவர்களை தவிர ரவிக்குமார், மலையரசன், அண்ணாதுரை, செல்வம், தரணிவேந்தன், முரசொலி ஆகிய எம்பிக்களும் தமிழில்தான் பேசினார்கள். அதேபோல ஆ.ராசா, அருண் நேரு, கார்த்தி, ராபர்ட் புரூஸ், விஜய் வசந்த், கலாநிதி வீராசாமி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் ஆங்கிலத்தில் பேசினார்கள்.
நாடாளுமன்றத்தில் மாநில மொழிகள்
இந்தியாவை பொறுத்தவரை, இங்கு தேசிய மொழி என்கிற செட்டப் கிடையாது. இந்திய பரவலாக பேசப்பட்டாலும், பெரும்பான்மையாக மாநில மொழிகள்தான் பேசப்படுகிறது. எனவே, நாடாளுமன்றத்தில் மாநில மொழியில் பேச கோரிக்கைகள் எழுந்தன. 1950 முதல் எம்பிக்கள் தங்கள் தாய் மொழியில் பேச அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதை மொழிப்பெயர்ப்பதில் சிக்கல்கள் இருந்தன. பின்னர் நவீன தொழில்நுட்பம் வந்ததையடுத்து மொழிபெயர்ப்பு சிக்கல் நீக்கியது.
தற்போதைய நடைமுறை என்ன?
தற்போது ஒரு எம்பி தனது தாய்மொழியில் பேச வேண்டும் எனில் குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்னர் அவையின் செயலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர், இதற்கான மொழிபெயர்ப்பு ஏற்பாடுகளை செய்வார். இருப்பினும் அவையில் தாய் மொழியில் பேசினாலும், அந்த உரை மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் அவை குறிப்பில் இடம் பெறும்.
-
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
டிபன்டர் காருடன் போஸ் கொடுத்த.. பிரேமலதா! திமுகவுக்கு தேவையில்லாத ஆணி.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
திருவாடானை தொகுதியில் களமிறங்கும் திமுக? MLA சீட் ரேஸில் யார்? -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை!












Click it and Unblock the Notifications